கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றத்துக்குப் பின்னர் நிறுவப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், அதன் ‘மங்கல’ வரவு – செலவுத் திட்டத்தை, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் இன்று (25) சமர்ப்பிக்கவுள்ளது.
அடுத்த வருடத்தில் பல தேர்தல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியகூறுகள் தென்படுவதால், மக்களுக்கு நிவாரணங்களை அள்ளி வழங்கக்கூடிய வகையில், இந்த வரவு – செலவுத் திட்டம் அமையலாமென, பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
அதுமட்டுமன்றி, நாட்டில் வறுமையை ஒழிக்கும் வகையிலான திட்டங்களை கொண்டிருக்கும் வகையிலேயே, இன்றைய வரவு – செலவுத் திட்ட யோசனைகள் அமைந்திருக்குமென்றும் பரவலாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்பதுடன், அரசாங்கத்தின் கொள்கை விளக்கத்தில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்குப் பதில்கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில், இன்று (05) பிற்பகல் 2 மணிக்குக் கூடும். அதன் பின்னர், 2019ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் மங்கள சமரவீர, பிற்பகல் 2.02க்கு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுவார்.
நிதியமைச்சர் மங்கள சமரவீர, சம்பிரதாயபூர்வமான பெட்டியில், வரவு –செலவுத் திட்ட யோசனைகளை எடுத்துவருவரா? அல்லது கோவையிலேயே கொண்டுவருவாரா? என்பது தொடர்பில், இரகசியம் காக்கப்படுவதாக, நிதியமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையொட்டி, நாடாளுமன்ற வளாகத்திலும், நாடாளுமன்றத்தில் பல அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எம்.பிக்களின் அறைகள் உள்ளிட்ட சகல பகுதிகளிலும் விசேட சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் ஆகியோர் வருகைதரும் வாகனங்களைத் தவிர, ஏனைய உறுப்பினர்களின் வாகனங்களுக்கும் நாடாளுமன்ற பணியாளர்களின் வாகனங்களுக்கும் விசேட போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இன்றையதினம் சகல கலரிகளும் அழைக்கப்பட்ட அதிதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள், ஏனைய விருந்தினர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை என படைக்கல சேவிதர் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, வரவு – செலவுத் திட்ட யோசனைகளுக்கு அங்கிகாரம் பெற்றுக்கொள்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், விசேட அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி செயலகத்தில் இன்றுகாலை நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு, அமைச்சரவை அந்தஸ்துள்ள சகல அமைச்சர்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளன.
2019ஆம் ஆண்டு நிதி ஒருக்கீட்டுச் சட்டமூலத்தின் மீதான விவாதம், சனிக்கிழமை உட்பட, 26 நாள்களுக்கு காலை முதல் இடம்பெறும். மார்ச் 12ஆம் திகதி வரையிலும் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதமும், இடம்பெறும், அன்றிலிருந்து ஏப்ரல் 5ஆம் திகதி வரையிலும் அமைச்சுகள் மீதான விவாதமும் இடம்பெற்று, அன்றையதினம் மாலை 6 மணிக்கு இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இந்நிலையில், இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும் வரையிலும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சகலரும் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதிக்கான ஒதுக்கீடுகளை தோற்கடிக்கும் முயற்சியொன்றை, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பிகள் முயற்சித்துவருகின்றனர் என்பதால், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அன்றையதினம், கட்டாயமாக அவையிலிருக்கவேண்டுமென, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அறிவுறுத்தியுள்ளது.
04:26 PM
உள்நாட்டு சாராய உற்பத்திகளின் விலைகள் இன்று நள்ளிரவில் திருத்தம். கள்ளு சாராயத்தின் விலையில் மாற்றமில்லை
04:24 PM
ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து அலுவலக நேரங்களில் அதிவேக நெடுஞ்சாலையின் கட்டணம் 100 ரூபாயால் அதிகரிப்பு
04:23 PM
மடு தேவாலயத்தை அபிவிருத்தி செய்ய 200 மில்லியன் ஒதுக்கம்.
04:19 PM
வரவு செலவு திட்ட வாசிப்பு நிறைவு. நாடாளுமன்றம் நாளை காலை 9 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
04:19 PM
கெசினோ அனுமதி கட்டணம் 200 மில்லியனிலிருந்து 400 மில்லியன் ரூபாய் வரை அதிகரிப்பு
04:17 PM
நாளையிலிருந்து அதிசொகுசு வாகன இறக்குமதி வரியில் திருத்தம்
மேற்கொள்ளப்படவுள்ளதுடன். வாகன இறக்குமதிக்காக விதிக்கப்பட்டுள்ள 200 சதவீத
வைப்பு இரத்து செய்யப்படவுள்ளது.
04:16 PM
சிகரெட்டின் விலை இன்று நள்ளிரவிலிருந்து 5 ரூபாயால் அதிகரிப்பு
04:14 PM
யுத்தகாலத்தில் அழிவடைந்த பகுதிகளை அபிவிருத்தி செய்ய 5 பில்லியன் ஒடுக்கீடு
04:13 PM
புகையிலைக்கான வரி 2,500 ரூபாயிலிருந்து 3,500 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை
04:10 PM
வடக்கில் 10 பொருளாதார மத்திய நிலையங்கள். பல்வேறு வேலைத்திட்டங்களுக்காக வங்கிகளுக்கு 250 மில்லியன் ஒதுக்கீடு
04:06 PM
இராணுவ வீரர்களின் சீருடைக்கான கொடுப்பனவை அதிகரித்தல்
04:03 PM
இயற்கை அனர்த்த முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்காக 20,000 மில்லியன்
04:00 PM
சமுர்த்தி அபிவிருத்திக்கு 1,000 பில்லியன்
03:59 PM
கலைஞர்களை ஊக்குவிக்க நடவடிக்கை.
03:59 PM
பிளாஸ்ரிக், பொலித்தீன் உற்பத்திகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள்
செப்டெம்பர் 1 ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயம் பதிவு செய்வது அவசியம்.
03:57 PM
இயற்கை அனர்தங்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நட்ட ஈட்டை துரிதமாக வழங்க நடவடிக்கை
03:55 PM
சமுர்த்தி வேலைத்திட்டத்தை மீள கட்டமைக்க நடவடிக்கை. சமுர்த்தி
பயனாளிகளின் எண்ணிக்கை 6 இலட்சத்தால் அதிகரிக்கப்படும்.
03:53 PM
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை வலுப்படுத்த 100 மில்லியன். கிராம சக்தி வேலைத்திட்டத்துக்காக 500 மில்லியன்.
03:51 PM
குடிநீர் திட்டத்துக்காக 45,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
03:47 PM
அரச பணியாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக 40 பில்லியன் ஒதுக்கீடு
03:46 PM
ஜூலை முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் கொடுப்பனவு
03:45 PM
அதிக வசதிகளையுடைய ரயில் சேவைகளுக்கு அதிக கேள்விகள் நிலவுகின்றன.
இதற்காக 4 புதிய ரயில் பாதைகள் அமைக்ககப்படவுள்ளன. மாலபே- கொழும்பு இலகு
ரயில் பாதைக்காக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
03:45 PM
அரச பணியாளர்களுக்கு 2,500 ரூபாய் அதிகரிப்பும் ஓய்வூதியர்களின்
கொடுப்பனவை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வுக் காணவும்
நடவடிக்கை. ஓய்வூதிய கொடுப்பனவுக்காக 12,000 மில்லியன் ஒதுக்கீடு
03:43 PM
ஓட்டோ, சிறிய கார்களின் போக்குவரத்தை அதிகரிக்க கடன்
திட்டமுறையொன்று அறிமுகப்படுத்தப்டவுள்ளது. அதற்கமைய தற்போதைய பாவனையிலுள்ள
ஓட்டோக்கள் அகற்றப்பட வேண்டியுள்ளது.
03:41 PM
2016 ஆம் ஆண்டு எடுத்த தீர்மானத்துக்கமைய, அரச பணியாளர்களின்
சம்பளம் 107 சதவீத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் சம்பள
தொகையை அதிகரிக்க 4 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
03:39 PM
கிராம வீதிகளை புனரமைப்பு செய்ய 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
03:37 PM
கட்டாக்காலி நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுபடுத்த 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
03:36 PM
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துதல், நகர வசதிகளை
மேம்படுத்துதல் ஆகியவற்றை கருத்திற்கொண்டு பழைய கட்டடங்களை புனரமைக்க
நடவடிக்கை
03:35 PM
யாழ்ப்பாணம் பழைய நகர சபையை புனரமைப்பு செய்ய 700 மில்லியன்
ரூபாய் ஒதுக்கீடு.கண்டியை அபிவிருத்தி செய்ய தற்போது 900 மில்லியன் ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
03:34 PM
கொழும்பில் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் வகையில் 10,600 மில்லியன் ஒதுக்கீடு.
03:33 PM
அருவக்காடு கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்கு 7000 மில்லியன் ஒதுக்கீடு.
03:30 PM
தேசிய ஒலிம்பிக் நிதியத்தை வலுப்படுத்த நடவடிக்கை
03:29 PM
கொலன்னாவ மற்றும் அலுவிகார விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்ய 300 மில்லியன்
03:25 PM
சுகாதார துறையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 24,750 மில்லியன் ஒதுக்கீடு
03:21 PM
விளையாட்டுத்துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இலவச பயிற்சிகளை வழங்க நடவடிக்கை
03:20 PM
பொருளாதார அபவிருத்திக்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் உள்ளடக்கம்.
03:19 PM
3இலட்சம் மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் தோற்றினாலும் 35,000
மாணவர்களே பல்கலைக்கழகங்களுக்குச் செல்கின்றனர். ஏனையோர் அரச சார்பற்ற
பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பிருந்தும் நிதி வசதி இல்லாமல் கல்வியைத்
தொடர முடியாதவர்களுக்கு ' மை பியுச்சர்' என்ற திட்டத்தின் கீழ் 1.1
மில்லியன் ரூபாய் வட்டியற்ற கடன் வழங்கப்படும் .
03:19 PM
பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை அதிகரிக்க 32,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
03:18 PM
பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 25,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
03:17 PM
கம்பெரலிய வேலைத்திட்டத்தை வலுப்படுத்த 48,000 மில்லியன் ஒதுக்கீடு
03:15 PM
ருஹூணு பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடமொன்றை நிறுவ நடவடிக்கை
03:14 PM
நிபந்தனையுடன் வெளிநாட்டில் உயர்கல்வியை தொடர வாய்ப்பு. 10
வருடங்கள் இலங்கையில் தொழில்புரிய வேண்டும் என்பது கட்டாயம்..
03:13 PM
இலங்கையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு
உலகில் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர வாய்ப்பு
03:10 PM
கல்வித் துறைக்கு 32 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
03:10 PM
தகவல் தொழிநுட்ப சேவை தொழிற்றுறைக்கு கலைப்பட்டத்தாரிகளை
இணைத்துக்கொள்வதற்காக 1300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
03:09 PM
வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க அனைத்துவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
03:07 PM
சகல உற்பத்திகளினதும் தரத்தை உயர்த்த நடவடிக்கை
03:06 PM
தனியார் நிறுவனங்களுடன் கலந்துரையாடிய பின்னர் தேசிய வருமான சட்டத்தில் தேவையான திருத்தத்தை மேற்கொள்ளுதல்
03:01 PM
அம்பேபுஸ்ஸ, வீரவில ஆகிய இடங்களில் இரண்டு விவசாய நிலங்களை
சிறைச்சாலை திணைக்களத்துடன் இணைந்து அமைப்பதற்கும், சிறையில் தடுத்து
வைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு கைவினைப் பொருட்களை செய்யும் மத்திய நிலையம்
ஒன்று தொம்பே கிராமத்தில் அமைக்கப்படவுள்ளதுடன், இதற்காக 50 மில்லியன்
ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
03:00 PM
வடக்கில் முஸ்லிம்களை மீள் குடியமர்த்த நடவடிக்கை
02:57 PM
தனியார் நிறுவனங்களும் பிரசவ விடுமுறையை 3 மாத காலம் வழங்கும் வகையில் வழிவகைகளை செய்தல்.
02:54 PM
250 க்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களில்
சிறுவர் பாதுகாப்பு மத்திய நிலையத்தை அமைக்கும் தனியார் நிறுவனங்களுக்கு
என்டபிரைஸஸ் ஸ்ரீ லங்காவின் கீழ் பாதுகாப்பு நிவாரண நிதியை வழங்க நடவடிக்கை
02:53 PM
வெளிநாட்டில் தொழில்புரிவொருக்கு சீனமாளிகா கடன் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
02:53 PM
25 வருடங்களில் செலுத்தக் கூடிய வகையில் 6 சதவீத வட்டி
அடிப்படையிலான இலகுக் கடன் திட்டங்களை இளம் ஜோடிகளுக்கு வழங்க நடவடிக்கை
02:51 PM
வடக்கு கிழக்கு ஆகிய பகுதிகளில் குறைந்த வருமானம் பெறும்
குடும்பங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். அத்துடன் அங்குள்ள
மக்களுக்காக வீடமைப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க 24 பில்லியன்
ஓதுக்கீடு
02:49 PM
சிறைச்சாலை திணைக்களத்துடன் இணைந்து போதைப்பொருள் பாவனையில்
ஈடுபட்டவர்களை அதிலிருந்து மீட்கும் வகையில் வேலைத்திட்டங்கள்
முன்னெடுக்கப்படும்
02:47 PM
சிறுநீரக நோயாளர்களுக்கு 1800 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
02:46 PM
அங்கவீனமுற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை 3,000
ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை
02:45 PM
மொரகாகந்த, களுகங்கை திட்டங்களை அடுத்தாண்டு நிறைவு செய்ய எதிர்பார்ப்பு
02:45 PM
நாட்டில் சகல பாடசாலை மாணவர்களுக்கும் ஒரு கோப்பை பால் இலவசமாக வழங்கப்படும்
02:40 PM
புகையிரத நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கழிப்பறைகள்
அமைக்கப்பட்டு அவை தனியாருக்கு நிர்வகிக்க கொடுக்கப்படும்.
02:39 PM
100,000 க்கு மேற்பட்டோருக்கு கழிப்பறை வசதிகள் இல்லை.
மொனராகலையில் மாத்திரம் 35,000 குடும்பங்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லை.
கடந்த அரசாங்கம் இதனை கவனிக்கவில்லை. இந்த வருடம் சகலருக்கும் கழிப்பறை
வசதிகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் 4 பில்லியன் ஒதுக்கீடு
02:34 PM
மீன் ஏற்றுமதி மூலம் 209 மில்லியன் ரூபாய் இலாபம் வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளது.
02:33 PM
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைத் தொடர்பில்,
தேயிலை சபையுடன் கலந்துரையாடி விரைவானத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க
நடவடிக்கை
02:31 PM
கறுவாப்பட்டையை ஏற்றுமதி செய்யும் வகையில், அத்தொழில் துறையை
ஊக்குவிப்பதற்கு 75 மில்லியன் ரூபாய் ஒதுக்க நடவடிக்கை
02:30 PM
தேசிய இளைஞர் சேவைகள் சபையின் உறுதிப்படுத்தப்பட்ட
பயனாளிகளிகளுக்கு என்டபிரைஸஸ் கடன் திட்டத்தை பெற்றுக்கொடுக்கும் போது
முக்கியதுவம் வழங்கப்படும். இதுவரை 60,000 மில்லியன் ரூபாய்
ஒதுக்கப்பட்டுள்ளது.
02:29 PM
இறப்பர் உற்பத்திக்கு 800 மில்லியன் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதுடன், தெங்கு உற்பத்தியை அதிகரிக்கவும் தெங்கு
உற்பத்தியில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கவும் நடவடிக்கை
02:28 PM
விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்க 250 பில்லியன் ஒதுக்கப்படும்.
அநுராதபுரம், குருநாகல், புத்தளம், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் விவசாய
நடவடிக்கை மேம்படுத்தப்படும் என நிதியமைச்சர் தெரிவிப்பு.
02:25 PM
சிறிய மற்றும் மத்திய தர வர்த்தகர்களை ஊக்குவிக்க நடவடிக்கை
02:21 PM
என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த நடவடிக்கை. இதன் மூலம் கடன் வசதிகளை வழங்க நடவடிக்கை
02:19 PM
கடந்தாண்டு அரசியல் சூழ்ச்சியால் முதலில் நிறுத்தப்பட்டது கம்பெரலிய வேலைத்திட்டமாகும்.
02:09 PM
பொருளாதாரத்தை நிலையான நிலைக்கு கொண்டு செல்ல முடிந்த போதும்,
கடந்தாண்டு நவம்பர் மாதம் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக
இலங்கைக்கு கிடைக்கவிருந்த பல கடன் திட்டங்கள் இல்லாமல் போயின
02:08 PM
வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்படுவதற்கு முன்னர், நிதியமைச்சர் மங்கள சமரவீர சபையில் தற்போது உரையாற்றுகிறார்.
02:05 PM
நிதியமைச்சர் மங்கள சமரவீர, 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்ததை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க தயாராகிறார்.
02:04 PM
நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் ஆரம்பம்.
02:00 PM
73 ஆவது வரவு செலவுத் திட்டம், இலங்கையில் 24 ஆவது நிதி
அமைச்சரான, மங்கல சமரவீரவால் சற்று நேரத்தில் சபையில்
சமர்பிக்கப்படவுள்ளது.
0 Comments