அன்று வாழ்வில் வசந்தம் தேடி மனிதன் நகர்ப்புறம் நோக்கி நகர்ந்தான், இன்றும் இனி வரும் காலங்களிலும் நகரமயமாக்களில் இருந்து தப்பிப் பிழைத்து கிராமங்களை நோக்கி நகர்வோருக்கே வாழ்வில் வசந்தம் காத்திருக்கின்றது.
அன்று, இயற்கை சுற்றுச் சூழலுடன் கூடிய எளிமையான கிராமத்து வாழ்க்கையில் பொழுது இனிமையாக கழிந்தது, மன அழுத்தம் என்னவென்றே தெரியவில்லை.
இன்று, ஆடம்பரங்களும், சௌகாரியங்களும், நிறைந்த நாலு சுவருக்களுக்குள் முடங்கிவிடும் நகர வாழ்க்கையில் சிரிப்பதற்கும் அழுவதற்கும் மனிதன் கால நேரம் மற்றும் கணக்கு வழக்கு பார்ப்பதால் மன அழுத்தம் அதிகரித்து வருகின்றது.
நாலு சுவருக்களிற்குள் இருக்கும் நாங்களும் நம் பிள்ளைகளும் இன்று ஐ போன்களுக்குள்ளும், கணனிகளுக்குள்ளும் காணாமல் போயுள்ளோம், மன அமைதிக்கான தேடலில் சைபர் உலகில் தொலைந்து விடுகின்றோம்.
அன்பும், அங்கீகாரமும், சிரிப்பும், அழுகையும், அரட்டையும், விருப்பும், வெறுப்பும் , வாழ்த்தும், பிரார்த்தனையும் என எல்லா உணர்வுகளும் மென்பொருட்களின் வலையமைப்புகளில் வந்து போகின்றன.
நகர வாழ்க்கை நரக வாழ்க்கையானது, சைபர் உலகில் சைவர் ஆகிப்போனது வாழ்க்கை..!
-inamullah masihudeen-
0 Comments