Subscribe Us

header ads

கற்பிட்டி பாமசியில் சிகரட் விற்பனை என கிடைத்த தகவலை அடுத்து, பாமசி உரிமையாளர் கைதாகி 900 சிகரட்களும் சிக்கின.



சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்ட ஒருதொகை வெளிநாட்டு சிகரட்களுடன் 

சந்தேக நபர் ஒருவர் நேற்று (23) கற்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கற்பிட்டி நகரில் உள்ள மருந்தகம் (பாமசி) ஒன்றில் இவ்வாறு வெளிநாட்டு சிகரட் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த பாமசியை சோதனையிட்ட பொலிஸார், சந்தேகத்தின் பேரில் குறித்த பாமசி உரிமையாளரை கைது செய்துள்ளார்.

அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 45 பெக்கட்களில் அடைக்கப்பட்ட 900 வெளிநாட்டு சிகரட்களும் இதன்போது பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


தகவல்  ரஸ்மின் : தெரண 

Post a Comment

0 Comments