கட்டாரின் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதற்கான மிக ஆழமான சமிக்ஞையாக பகுப்பாய்வாளர்களினால் பார்க்கப்படும் பெற்றோல் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் அமைப்பிலிருந்து கட்டார் விலகிக் கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் GCCயின் 39வது மாநாடு இன்று சவூதி அரேபியாவின் றியாத் நகரில் சவுதி மன்னர் சல்மான் தலைமையில் நடைபெறுகின்றது.
கடந்த வருடம் குவைத் நாட்டில் நடைபெற்ற 38 GCCயின் மாநாட்டில் கத்தார் அதிபர் கலந்து கொண்டிருந்தார். என்றாலும் சவுதி அரேபியா மன்னர் சார்பாக சில பிரதிநிதிகளை அனுப்பி வைத்திருந்தது. அதே பாணியில் தற்போது கத்தார் நடந்து கொண்டுள்ளது எனலாம். வளைகுடா நாடுகள் தங்களுக்குள் ஏற்பட்டுள்ள முருகல் நிலையை ஒன்றாக அமர்ந்து பேசித் தீர்த்துக் கொள்ளாமல் இது போன்ற நடந்து கொள்வது அந்த நாடுகளுக்குள் மேலும் விரிசலை ஏற்படுத்தும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகும்.
0 Comments