Subscribe Us

header ads

அதிர்ச்சி தகவல் - தாஜுதுனின் கொலைக்கு அழைப்புக்கள் அனைத்தும் அம்மணியின் அறையிலிருந்த தொலைப்பேசியிலிருந்து தான் சென்றுள்ளது. - ராஜித


அன்று ஸ்ரீ விக்ரமவை எஹலிய பொல வெள்ளையர்களுக்குபாரம் கொடுத்ததைப் போன்று
தான் ஜனாதிபதி என்னையையும் மஹிந்தவிற்கு பாரம்கொடுக்க நினைத்தார்” என பாராளுமன்ற உறுப்பினர் ராஜிதசேனாரத்ன தெரிவித்தார்.

ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்கான மக்களின் நீதிக் குரல்என்ற போராட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டில் இன்றுகண்டி நகரில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டே  பாராளுமன்ற உறுப்பினர் ராஜிதசேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய ராஜித சேனாரத்ன,

ரணிலுடனான அசாத்தியமான  அரசியலில்  பயணம்தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதியபுத்தகமொன்றை எழுதப் போவதாக தெரிவித்துள்ளார்

நாங்களும் ஒரு புத்தகமொன்றை எழுதப் போகிறோம் 1815காட்டிக் கொடுப்பை அடுத்து மிகப் பெரிய காட்டி கொடுப்பைபற்றி,

இந் நாட்டின் ஜனநாயகத்திற்காகவும்இந் நாட்டு மக்களின்நிம்மதிக்காகவும்அமானுஷ்ய மனித கொலைகள் மற்றும் மிகப்பிரமாண்டமான கொள்ளைகளுக்கு எதிராகவும் எங்கள்வாழ்க்கையை பணயம் வைத்து யாராலும் வெற்றி பெறமுடியாது என கருதிய காலத்தில் வெற்றி பெற முடியாதயுத்தத்தை வெற்றி பெறுவதற்காக அன்று அவரும் நாங்களும்ஒன்றாக கை கோர்த்து வெளியேறினோம்.

அவ்வாறு வெளியில் வந்து உருவாக்கிய அரசாங்கத்தில்பயணித்துக் கொண்டிருக்கும் போது அவர்(ஜனாதிபதிஇன்றுஅவருடைய பயணத்தை இடை நிறுத்தியுள்ளார்.

நான் அவரிடம் கேட்பது என்னவென்றால் அவர் இவ்வாறுபயணத்தை இடை நிறுத்தியது மனித கொலைகள் தொடர்பாகநடவடிக்கை எடுத்த பின்னராகொள்ளைகள் தொடர்பாகஆராய்ந்த பின்னராஇவை ஒன்றை கூட செய்யாது இன்று அவர்அவரது அறப் போராட்டத்தை காட்டி கொடுத்துள்ளார்.

அவர் நின்ற இடத்திலிருந்து நாங்கள் முன்னேறிச் செல்வோம்என்பதை இந் நாட்டு மக்களோடு சேர்ந்து அவரும் நினைவில்வைத்துக்கொள்ளட்டும்.

நாங்கள் அதை நிறுத்த மாட்டோம்நாங்கள் இந்த மக்கள்கங்கையை ஒன்று திரட்டி அன்று அவர் கூறிய வாக்குறுதிகளைமக்களுக்கு நிறைவேற்றி கொடுப்போம்.

இன்று மைத்திரிபால சிறிசேனவிற்கு இவையனைத்தும் மறந்துஇருந்தாலும் எங்களுக்கோ உங்களுக்கோ இவற்றையெல்லாம்மறக்க முடியாது.

நாங்கள் அன்று கூறியதையோகதைத்ததையோமறக்கவில்லைஇம் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக உச்சநீதிமன்றில் தினந்தோறும் விசாரணைகளைநடைபெறவுள்ளமையால் ஒரு வழக்கு முடிவடைவதற்கு ஒருமாதம் கூட செல்லாது ஆகையாலேயே இவற்றிலிருந்துதப்பித்துக் கொள்வதற்காக மஹிந்த ஓடி வந்து மைத்திரியின்காலில் விழுந்து பிரதமர் பதவியை பெற்றுக் கொண்டுள்ளார்.

அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சிறைக்கு செல்வார்கள் தாஜூதின் படு கொலை செய்யப்பட்டமைக்கு அவர்கள் தூக்குமேடைக்கு செல்வார்கள் என தெரிந்தே எங்களதுவேலைத்திட்டங்களை கெடுப்பதற்காக இந்த அரசியல்சதித்திட்டங்கள்.

மஹிந்த ஏன் மாறினார் தெரியுமாதனது உயிர்பாதுகாப்பிற்காக , தனது பின்ளைகளினதும் மனைவியினதும்வாழ்க்கையை பாதுகாப்பதற்காக,  தாஜூதின் படு கொலைசெய்யப்படும் நாளில் கல்கிஸ்ஸை பொலிஸ்பொறுப்பதிகாரிக்கும்நாரஹேன்பிட்ட பொலிஸ்பொறுப்பதிகாரிக்கும் பிரதி பொலிஸ் மா அதிபர் அநுரசேனநாயக்கவிற்கும் 46 தொலைபேசி அழைப்புக்கள்எங்கிருந்து சென்றது

அவ் அழைப்புக்கள் அனைத்தும் அம்மணியின் அறையிலிருந்ததொலைப்பேசியிலிருந்து தான் சென்றுள்ளதுமகனின் கொலைகுற்றங்களுக்கு தாயே துனை சென்றார்இவையனைத்தும்அறிந்து தான் அன்று வெளியேறினோம்உங்களோடுஇனைந்தோம்.

இனைந்து 3 ஆண்டுகளாக அவர்களுக்கெதிராகநடவடிக்கைகளை மேற்கொள்ள அரும்பாடு பட்டுள்ளோம்.

நாங்கள் உங்களையெல்லாம் எங்கு சந்தித்தாலும் நீங்கள்எம்மிடம் கேட்ட கேள்வி ஏன்ஐயா படுகொலையாலிகளைஇன்னும் விட்டு வைத்திருக்கிறீர்கள் என.

அவர்களால் எமது நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறத்திவைக்க முடியும்ஆனால் நிரந்தரமாக இல்லைஎங்கள்அமைச்சர்களை பணத்திற்காக வாங்க முடியாது அப்படிசென்றவர்கள் மீண்டும் வந்து விட்டார்கள்.
எனவே நேர்மையான எங்களது யுத்தம் மெது மெதுவாக கட்டம்கட்டமாக வெற்றியடையும் அவற்றை நாங்கள் வெற்றிகொள்வோம்.

இன்று அவர்களுக்கு பாராளுமன்றம் இல்லைபாராளுமன்றில்நாங்கள் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்தோம்.ஆனால் அவர்கள் மிளகாய் தூள் வீசினார்கள்கதிரைகளில்தண்ணீர் ஊற்றி வைத்தார்கள்,  கதிரைகளை உடைத்தார்கள்இருப்பினும் நீதிக்காக குரல் கொடுத்து பாராளுமன்றசம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து நம்பிக்கையில்லாபிரேரணையை நிறைவேற்றினோம்.

சிறிசேனவிற்கு பெரும்பான்மை இல்லை என்றும் மஹிந்தவிற்குபெரும்பான்மை இல்லை என்றும்  இப்போது முழு உலகத்திற்கும்தெரியும் 
ஜனாதிபதி பதவியை துறப்பதற்கு தயார் என்றும் இறக்க தயார்என்றும்  நேற்றிரவு கூறி விட்டு மத்தும பண்டாவைப் போல அரசஇல்லத்தில் ஒழிந்து இருக்கிறார்.

உயிரிழக்க தயார் என்றால் வெளியில் வாருங்கள்போராட்டத்திற்கு முகம் கொடுங்கள் முடியுமென்றால்பாராளுமன்றிற்கு வந்து பாருங்கள் உங்களுக்குபெரும்பான்மை இருக்கிறதா என்பதை நாங்கள் 122இல் நின்றுவிடப்போவதில்லை வெகு விரைவில் 130 கடந்துகாட்டுகிறோம்நான் நேற்று முன் தினம் 113 தேவையில்லைமுடியுமென்றால் பாராளுமன்றிற்கு வந்து நாளை(நேற்று) 85ஆதரவை காட்டு என மஹிந்த ராஜபக்ஷவிற்கு கூறினேன்.ஆனால் பாராளுமன்றிலிருந்து எழுந்து சென்று விட்டார்கள்.

பாராளுமன்ற வரலாற்றில் எதிர்கட்சி தான் ஆளும்கட்சியின்பெரும்பான்மைக்கு முகம் கொடுக்க முடியாது எழுந்து செல்வதுவழக்கம்ஆனால் இங்கு தான் முதல் முறையாக ஆளும் கட்சிபெரும்பான்மையை நிரூபிக்க முடியாது எழுந்து சென்றுள்ளது.

இன்று அவர்களுக்கு பாராளுமன்றமும் இல்லை நாடும் இல்லைமஹிந்தக்களுக்கு வீதியில் இறங்க முடியாது.மரத்துப்போயிருந்த ஐக்கிய தேசிய கட்சியை மைத்திரிபால சிறிசேனதட்டி எழுப்பி விட்டுள்ளார்." என ஆக்ரோஷமாக தெரிவித்தார்.
Virakesari-

Post a Comment

0 Comments