ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எனும் இலங்கை விமான நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் உலகளவில் 91.37 புள்ளிகள் பெற்று நேரந்தவறாத புறப்பாடு மற்றும் வருகை சேவையில் "World's Most Punctual Airline"எனும் முதல் நிலையை பெற்றுள்ளதாக Global flight data analysis company Flightstats எனும் நிறுவனத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வு உலகின் மிக முக்கியமான 41 விமான சேவை நிறுவனங்கள் மற்றும் தரமான சேவைகளை வழங்கும் பெரிய விமான நிறுவனங்களுக்கிடையே ஆய்வு செய்யப்பட்டு தரவரிசையில் முதல் இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு "Data analysed by Flightstats under the key categories of "Global Airlines" and "Major Airlines" ஆகியவை வழங்கும் வழிகாட்டு நெறிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
The data showed that 91.37 per cent of SriLankan Airlines flights in September were on time.
The statement said that Flightstats had analysed data of 41 carriers from Europe, North America, Asia, the Middle East and South America, including most of the world's largest and most prestigious airlines.
இதற்கு முன் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி பயணிகளின் அனுபவ குறிப்புகளின் அடிப்படையில் வழங்கப்படும் 4 நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. உலகின் சுமார் 470 விமான சேவை நிறுவனங்களில் 12% விமான நிறுவனங்கள் மட்டுமே 5 நட்சத்திர அந்தஸ்தை பெற்றள்ளன. 14% விமான நிறுவனங்கள் மட்டுமே 4 நட்சத்திர அந்தஸ்தை தட்டிச் சென்றுள்ளன, அவற்றில் ஒன்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை விமான நிறுவனம் 47 நாடுகளின் சுமார் 150 வான்தடங்களுக்கு நேரடியாகவும், உலகின் 160 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,000 வான்தடங்களுக்கு பிற பன்னாட்டு விமான நிறுவனங்களுடன் (Oneworld’s worldwide network) கூட்டாகவும் சேவை வழங்கி வருகின்றது.
குறிப்பு: சர்வதேச விருதுகள் ஒருபுறமென்றால் இன்னொரு புறம் ஏர் இந்தியா நிறுவனத்தைப் போல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸூம் அதன் அதிகாரவர்க்க ஊழல்களால் பொருளாதார பேரழிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளது.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
0 Comments