ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் திடீரென சுகவீனமுற்றுள்ளார்.
திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக கபீர் ஹாசிம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் இரவு கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஹாசிம் அனுமதிக்கப்பட்டார்.
அவர் தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பார்வையிட சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், கபீர் ஹாசிமிற்கு ஆபத்தான நிலை கிடையாது என அவரது பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு சுகததாச மைதானத்தில் இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் நடத்தப்பட உள்ள நிலையில், கட்சியின் தவிசாளருக்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments