2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 அமெரிக்கா இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர், அமெரிக்காவுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பெற்றோலியம் திருடக் கிடைத்ததோ இல்லையோ, முஸ்லீங்களுக்கு ஒரு வார்த்தை கிடைத்தது. அதுதான் "யூத சதி".
இந்த செப்டெம்பர் 11 தாக்குதலுக்குக் காரணம் யூதர்கள் தீட்டிய சதி என்றும், அதற்கு ஆதாரபூர்வமாக பல ஆதாரங்களையும் முஸ்லீங்களும், ஏன் முஸ்லிமல்லாத அமெரிக்கர்கள் கூடவும் முன்வைத்தனர்.
இந்தப் பரவலாகப் பேசப்பட்ட "யூத சதி"என்ற வார்த்தைக்குப் பின்னால் உண்மை இல்லாமலும் இல்லை. நபியரவ்களுக்கே சதித்திட்டம் தீட்டியவர்கள், அல்லாஹ் தனது அல்குர்ஆனில் பல இடங்களிலும் இவர்களைப் பற்றிப் பேசுகிறான்.
இந்த சொல்லாடலுக்குப் பின்னால், உலகில் முஸ்லீங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அனைத்து எதிர் நடவடிக்கைகளுக்குப் பின்னாலும் யூதர்கள்தான் உள்ளனர் என்ற ஒரு கருத்தும் பரப்பப் பட்டது. இவர்களின் கூட்டமைப்பை "இலுமிநாட்டிகள்" என்ற பெயரினாலும் அழைக்கப்படுவதாகவும், உலகத்தையும், கார்ப்பரேட் உலகையும், உலக வணிகங்களையும் அவர்களே கட்டுப் படுத்துவதாகவும் கதைகள் வந்து முஸ்லீங்களிடையே தாராளமாய்ப் பரவவும் செய்தது.
இந்த கலந்துறையாடலில் இலங்கை முஸ்லீங்கள் மாத்திரம் விதிவிலக்காக அமைந்து விடவில்லை. இலங்கையில் முஸ்லீங்களும் வீட்டுக் கூறையில் கல் விழுந்தால் கூட "இது யூதனின் சதி", "இது இலுமிநாட்டிகளின் சதி", முஸ்லீங்களைத் திட்டமிட்டு அழிக்கப் பார்க்கிறார்கள் என்ற கருத்து பரவலாகப் பரப்பப் பட்டது. ஒருசில உண்மைகளும் இருக்கலாம். ஆனால் இதை வியாபாரமாக்க நினைத்தனர் சிலர்.
ஏற்கனவே யூத - முஸ்லீம் எதிர்ப்பலைகள் மத்திய கிழக்காசியா, ஐரோப்பா, அமெரிக்கா வரை பரந்திருக்க, அந்தத் தேசங்களில் இருந்து வரும் பொருட்கள், சேவைகளைக் கூட "யூத சதி", முஸ்லீங்களைத் திட்டமிட்டு அழிக்க எத்தனிக்கிறார்கள் என்ற கோசங்களை ஆரம்பித்தனர் ஒருசிலர்.
அதன் வெளிப்பாடு முதன்முறையாக பரவலாக வெளியிடப் பட்டது "சத்திர சிகிச்சை ஹராம், அதில் யூத சதி இருக்கிறது" என்ற தகவல்தான். அதை வெளியிட்டவர் "நுஸ்ரான் (பின்னூரி) எனும் மார்க்கத்தைக் கற்று மவ்லவியாக வெளியேரிய ஒரு மார்க்க அறிஞரே.
எமது சமூகத்தில் ஒரு பழக்கம் இருக்கிறது. மார்க்க அறிஞர்கள் சொன்னால் கண்ணை மூடிக் கொண்டு அப்படியே நம்புவது. இது அந்த நுஸ்ரான் (பின்னூரி) க்கு பக்க பலமாக அமைந்து விட்டது.
அனேகமாக கிடைத்த தரவுகளின் படி கதை இதுதான். இலங்கையில் மத்ரஸாவொன்றில் ஓதிக் கொண்டிருக்கும் சமயம் உஸ்தாதுடன் பிரச்சினைப் பட்டு மத்ரஸாவை விட்டு வெளியேறி இருக்கிறார். பின்னர் பாகிஸ்தானில் "பின்னூரிய்யா" எனும் தலிபானிய சிந்தனையை அடிப்படையாகக் கொண்டியங்கும் மத்ரஸாவில் கற்றுக் கொண்டிருக்கும் சமயம் பாகிஸ்தானில் கைது செய்யப் பட்டு ஒரு வருடத்திலேயே அனுப்பப்பட்டார். இன்றளவிலும் CID விசாரணைக்குச் சென்று வருகிறார் என்பதாக ஒரு தகவல்.
எங்கேயோ சென்று இந்த டச்சிங், கட்டிப்புடி வைத்தியத்தை மனுசன் படிச்சிட்டு வந்திருக்கிறார். கடை திறந்து கொத்தமல்லித் தண்ணியை அவிச்சுக் காத்துக் கொண்டிருக்க யாரும் வரவில்லை. ஒரு காலத்தில் வயிற்றை நிறப்ப ஒருசிலர் மார்க்கத்தைப் பயன்படுத்தி கத்தம், கந்தூரி இஸ்லாத்தில் உள்ளது என்று சொன்னது போல, இதற்கும் மார்க்கத்தையே கடா வெட்டுவதற்குத் தயாரானார். கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி "சத்திர சிகிச்சை ஹராம், தடுப்பூசி யூத சதி" என்ற குண்டுகளை எல்லாம் தூக்கிப் போட்டார்.
குண்டடி பட்டு, அவர் பக்கமும் மக்கள் சரியத் தொடங்கினர். ஆதாரங்களுக்கு அல்குர்ஆன் வசனங்களை, ஹதீஸ்களை நாடினார். "நபிவழி மருத்துவம்" என்றும் பெயர் வைத்துக் கொண்டார். எதிர்பார்த்த மாதிரி business போயிருக்காது, உடனே அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இறங்கினார். Marketing. ஒரு பொய்யை ஒரு தரம் சொன்னால் அது பொய். ஒரு பொய்யை, ஆயிரம் பேர், ஆயிரம் தடவை திரும்பத் திரும்பச் சொன்னால்?
சொல்ல வைத்தார். "வீட்டுக்கு ஒரு வைத்தியர்" என்ற பாடநெறியை ஆரம்பித்தார். 6 நாட்களில் வைத்தியராகலாம் என்ற மந்திரத்தைத் தூக்கி வீசினார். சில படித்தவர்களும் அதனுல் போய் விழுந்தனர். ஒரு batch க்கு 100- 150 பேர் வருகின்றனராம். அனைவரும் முஸ்லீங்கள். 10 batch கள் தாண்டி, இப்போது 11 வது batch இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்கப் போகிறது. கிட்டத்தட்ட 1500 போலி டாக்டர்களை உருவாக்கி விட்டார்.
உலகில் மனித உடலுக்கு வரும் நோயைக் குணப்படுத்த பல மருத்துவ முறைகள் உள்ளன. அதில் இன்று உலகப் பிரபல்யம் பெற்றதே அலோபதி மருத்துவம். உங்கள் பாசையில் என்றால் western medicine. இலங்கையைப் பொருத்தவரையிலும் அந்த மருத்துவ முறைமை அங்கீகரிக்கப்பட்டு, 90% க்கும் மேற்பட்ட மக்கள் அந்த மருத்துவத்தையே நாடுகின்றனர். அது தவிர ஆயுர்வேசம், யூனானி, சித்த மருத்துவம், இன்னும் சில....
இவற்றில் சிலதை அரசாங்கம்/ சுகாதார அமைச்சு சட்டரீதியாக அனுமதித்து பல்கலைக்கழகங்களில் பாடநெறிகளும் அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட 4- 6 வருடங்கள் வரையிலான பயிற்சிகளுடன் கூடிய பாடநெறியாக ஆரம்பித்து இன்றளவில் இலங்கையிலும், உலகலாவிய ரீதியிலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சட்ட ரீதியான பல வைத்தியர்களை உருவாக்கி உள்ளனர்.
இந்தப் பாடநெறிகளில் கூட practical உடன் கூடிய செயற்திட்டங்கள் அமைக்கப்பட்டு, கடைசி 3-4 வருடங்களுக்கு வைத்தியசாலையுடன், நோயாளியுடன் நேரடித் தொடர்பு மூலம் கற்பிக்கப் படுகிறது.
உதாரணமாகச் சொல்லப் போனால் மனித உடலையும், அதன் செயற்பிடுகளையும் பற்றிக் கற்பிக்கப்படும் பாடமானது (Anatomy) குறைந்தபட்சம் இரு வருடங்களுக்காவது இந்த பாடநெறிகளில் கற்பிக்கப்படுகிறதாம்.
அப்படி ஒரு புறமிருக்க, வெறும் ஆறே நாட்களில் ஒரு வைத்தியரை உருவாக்கும் ஒரு பாடத்திட்டத்தை அமைத்து, அதில் நான்கு நாட்களுக்கு மேற்கத்தேய மருத்துவம், அதில் உள்ள யூத சதிகள், அதன் விளைவுகள் என மேற்கத்தேய மருத்துவத்தைக் கழுவி ஊற்றவும், ஒரு நாள் முழுக்க இந்தக் டச்சிங், அக்கியுபஞ்சர், தாயத்து, கட்டிப்புடி வைத்திய மேட்டர்களையும் சொல்லிக் கொடுக்க 15,000/= அறவிடுவதுடன், படிப்பு முடிந்த பின்னர் Acu அல்லது அக்குஹீலர் என்ற அடைமொழியுடன் (இந்த MBBS போல அவங்களுக்காம்) வீட்டில் Medical dispensary வைத்துக் கொள்ள அனுமதிப்பதுடன், தேவையான மருத்துவப் பொருட்களையும் அவர்களே வினியோகம் செய்வார்களாம்.
இந்த வைரஸ் கடந்த வருடங்களில் ஆரம்பித்து நாடு பூராகவும், அதுவும் முஸ்லீங்களிடையே பரப்பப்பட்டு, இன்றளவில் குறைந்தது ஒரு 1500 வைத்தியர்களாவது பட்டப்படிப்பு முடித்து 10,000 பேரையாவது இந்த மேற்கத்தேய மருத்துவம் ஹராம் என்ற சிந்தனையில் அவர் பக்கம் திருப்பி விட்டுள்ளனர்.
அப்பாஸியர் காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் அறிவியல் துறையில் கொடிகட்டிப் பறந்து கட்டடக்கலை, வானவியல், புவியில், தத்துவவியம், என பல அறிவியல் வளர்ச்சியில் ஈடுபட்ட முஸ்லீங்கள் மருத்துவத் துறையிலும் தனது ஈடுபாட்டைக் குறைக்கவில்லை.
நவீன மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்பட்ட அலி இப்னு ஸீனா, சத்திரசிகிச்சை முறைகளையும், பல நுற்றுக்கும் மேற்பட்ட சத்திரசிகிச்சை உபகரணங்களையும் கண்டுபிடித்த அல் ஸஹ்ராவி என முஸ்லீங்களில் பெயர் வரலாற்றில் பதியுமளவுக்கு மருத்துவத்துறையில் அறிவியல் பங்களிப்புக்களை வழங்கிச் சென்ற சமுதாயத்தில் "சத்திரசிகிச்சை ஹராம்" என்ற முட்டாள் பத்வாக்களையும் கொண்டு வந்திருக்கிறார் என்பது வேடிக்கைக்குறியதே.
இந்தக் கொள்கையில் சிக்குண்டு நம்பியர்களில் ஒருசிலர் தாம் ஏற்கனவே பாவித்து வந்த மருந்துகளைக் கைவிட்டதனாலும், நோய் என அறியப்பட்ட பின்னர் அவர்களை நாடி மருந்து எடுக்கச் சென்றும் என்று பலர் உயிர் பிரிந்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
Pettah வில் இவரது வைத்தியசாலை ஒன்று இயங்கி வந்ததாகவும், அதில் ஒருசில உயிரிழப்புக்கள் நிகழ்ந்ததால் வேறு ஒரு இடத்துக்கு மாற்றியதாகவும் தகவல்கள் கசிந்தன. இத்தனைக்கும் மேற்கத்தேய மருத்துவம் ஹராம் என்ற பத்வா வழங்கிய நபர் அவரது மனைவியின் "சுக" பிரசவத்துக்காக கொழும்பு Delmon hospital இல் அனுமதித்ததாகவும் அண்மைக் காலங்களில் தகவல்கள் கசிந்தன.
இந்த நொடி வரைக்கும் சிங்களப் பேரினவாதிகளுக்கு இந்த திருட்டு மருத்துவக் கும்பல் மாட்டவில்லை என்பது மேலதிக தகவல். அவ்வாறு அகப்படும் பட்சத்தில் முழு முஸ்லீங்களுடைய பெயரும்தான் சொல்லப்படும். ஒரு காலத்தில் "நம்பிக்கை வியாபாரத்துக்கு பெயர்போனவர்கள் முஸ்லீங்கள்" என்ற பெயர் வைத்து அழைக்கப்பட்ட நமது.சமூகம் இன்று போதைப் பொருள் வியாபாத்தில் பெயர் சொல்லப் படுகிறது. அது நாளை "திருட்டு மருத்துவகள்/ கள்ள டாக்டர்கள்" என்ற பெயரில் வந்தாலும் வரலாம்.
இத்தனைக்கும் யூதன் கண்டுபிடித்த computer இல் தனது advertisement ஐத் தயாரித்து, யூதன் உறுவாக்கிய Facebook இல் விளம்பரப்படுத்தி வகுப்பில் கூட யூதன் கண்டுபிடித்த projector, fan, mic, A/C என்பவற்றைப் பயன்படுத்தி யூத சதி இந்த மேற்கத்தேய மருத்துவம், யூத சதி பாடசாலைப் படிப்பு என்ற கொள்கையைப் பரப்பும் இந்த ஆசாமிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தக்க சட்டநடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அது தவறும் பட்சத்தில், நாளை ஒரு சமுதாயத்தையே பாடசாலைக் கல்விக்கும், மேற்கத்தேய மருத்துவத்துக்கும் உருவாக்கி, ஹராம் என்ற விஷக் கருத்தைப் பரப்ப வைத்து, நாளை முஸ்லீம் சமூகத்தின் இருப்பையும் இலங்கைத் திருநாட்டில் நடுச்சந்திக்குக் கொண்டுவந்து நிறுத்தி விடுவார் என்பதில் ஐயம் இல்லை.
வழக்கறிஞர்களே, சட்ட ஆலோசகர்களே, வைத்தியர்களே, அரசியல் ஆளுமை கொண்டவர்களே, துடிதுடிப்பான இளைஞர்களே, மீடியா நண்பர்களே, தயவுசெய்து இவ்வாறான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுங்கள். பணத்துக்காக அழையும் இந்தத் திருட்டு மருத்துவக் கும்பலையும், கள்ள டாக்டர்களையும் இன்றே கண்டறிந்து அகற்றுவதன் மூலம் ஒரு சுத்தப்படுத்தலை மேற்கொள்ள ஒன்றிணைந்து முன்வாருங்கள்.
சிறு வயதில் குழப்படிகாரன், பிரளிகாரன், ஒழுங்காய்ப் படிக்காதவன் என்று மத்ரஸாவில் கொண்டு போய் சேர்த்ததன் விளைவுகளை இன்று எமது சமுதாயம் இப்படியான சமுதாயத் துரோகிகளின் மூலம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. எனது நெருங்கிய நண்பரும், நுஸ்ரான் (பின்னூரி) யின் நெருங்கிய உறவினருமான ஒரு சகோதரருடன் அண்மையில் இதுபற்றிக் கதைத்த நேரம் "குடும்பத்தார் சொல்வது எதனையும் அவர் கேட்பதில்லையாம். குடும்பத்தில் எல்லோரும் அவருக்கு பயப்படுவதன் காரணத்தினால் யாரும் எதிர்த்துப் பேசப் போவதுமில்லை" என்றார்
இந்தப் போலி வைத்தியர் சம்பந்தப்பட்ட தொடர்ந்தேர்ச்சியான விழிப்பூட்டல் பதிவுகள் Rafi Sharifdeen மற்றும் Dr. Ahamed Nihaj அவர்களினால் இந்நாட்களில் எழுதப்பட்டு வருகிறது.
-சாபித் தாஹா-
0 Comments