கண்டி இனவாத நடவடிக்கையின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் மஹசொஹன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.
தனது கணவர் இனவாதத்தை தூண்டுமாறு எந்தவொரு பகிரங்க அறிவிப்பையும் செய்யவில்லை. கடைகள், பள்ளிவாயல் என்பவற்றை தீ வைக்குமாறு எனது கணவர் அறிவிக்கவும் இல்லை. பொலிஸார் தான் தனது கணவரை வருமாறு அழைப்பு விடுத்தார்.
தற்பொழுது அனைவரும் எனது கணவர் மீது பழியைப் போட்டுவிட்டு தம்மைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டைப் பதிவு செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
0 Comments