Subscribe Us

header ads

யாழில் உருளைக்கிழங்கு அறுவடை இம்முறை அமோகம் (படங்கள்)

பாறுக் ஷிஹான்


யாழ் மாவட்டத்தில்  உருளைக்கிழங்கு அறுவடை தற்போது மும்முரமாக இடம்பெற்று வருவதுடன்  இம்முறை  சசி வகை உருளைக்கிழங்கு விளைச்சல் அமோகமாக உள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டனர்.

இந்த வகை உருளைக்கிழங்கில் ஒரு அந்தரிலிருந்து 22 மூடை வரை பெற கூடியதாகவுள்ளதாகவும எனினும்  அனோவா வகை உருளைக்கிழங்கு விளைச்சலில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.




 இவ் உருளைக்கிழங்கு அறுவடை வெற்றியளித்தமை தொடர்பாக   யாழ் மாவட்ட செயலக விவசாயப்பணிப்பாளர் திருமதி கையிலாநாதன் கருத்து தெரிவிக்கையில்

அரசாங்கத்தினால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானிய அடிப்படையில் உருளைக்கிழங்கு செய்கை வழங்கப்பட்ட ஊக்கம் தற்போது  வெற்றி அளித்துள்ளது.இம்முறை 2816 ஹெட்யெருக்கான அறுவடைகளை நாம் எதிர்பார்த்துள்ளோம்.600 மெற்றிக்தொன் உருளைக்கிழங்கு அறுவடை தற்போது இடம்பெற்றுள்ளது.இதில் யாழ்ப்பாணத்தில் இம்முறை 425 விவசாயிகள் 310 ஏக்கர் நிலப்பரப்பில் உருளைக் கிழங்குச் செய்கை மேற்கொண்டிருந்தனர்.



இதில் சசிஇறெட்லசோடாஇஅனோவா போன்ற மூன்று ரக உருளைக்கிழங்கு விதை இனங்கள் விவசாயிகளுக்கு  வழங்கப்பட்டது.

இவற்றில் முதற்கட்டமாக கடந்த ஆண்டில் 325 விவசாயிகளுக்கு தல 200 கிலோ எடையுள்ள பிரான்சில் நாட்டில் இருந்து வருகை தந்த சசி ரக உருளைக்கிழங்கு விதை இனங்கள் வழங்கப்பட்டுள்ளது.இதற்காக யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு விதை உருளைக்கிழக்குகளை வழங்குவதற்காக விவசாய அமைச்சினால் தேசிய உணவு உற்பத்தியினை மேன்படுத்தும் இத்திட்டத்தின் ஊடாக 76.4 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.



இதன் காரணமாக  விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் இவ் விதை இனங்கள் வழங்கப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இப்பயிர்ச்செய்கையில் அநேகமான   விவசாயிகள் மிகவும் ஆர்வத்துடன் பயிர்ச்செய்கையில் ஈடுப்பட்டுவருகின்றனர். 



1400 விவசாயிகள் இந்த செய்கையினை மேற்கொள்ளுவதற்கு பதிவு செய்யப்பட்ட அதே வேளை  இவ் உருளைக்கிழங்கு செய்கை வகைகள் 50 கிலோவுக்கான அரை அரைமானியமாக 14 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக விவசாயிகளின் ஒரு எதிர்பார்ப்பு எமக்கான சந்தைப்படுத்தலுக்கான ஒரு தர நிர்ணய அடிப்படையிலான உற்பத்திகளை அரசாங்கம் விவசாயிகளுக்கு மேற்கொள்ளவேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.



இதில் அறுவடைகள் 40 ரூபாக்கு வியாபாரிகள் கொள்வனவு செய்து அதனை 50 ரூபாவுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

வலிகாமம் பிரதேசத்தில் ஏழாலை குப்பிளான் புன்னாலைக்கட்டுவன் ஈவினை வயாவிளான் சுன்னாகம் இணுவில் அச்செழு ஊரெழு உரும்பிராய் கோண்டாவில் கோப்பாய் ஆகிய பகுதிகளில் உருளைக் கிழங்குச் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இது தவிர   திருநெல்வேலி   அச்சுவேலி   பண்டதரிப்பு ஆவரங்கால் நீர்வேலி ஆகிய பகுதிகளில் அறுவடைகள் இடம்பெறுகின்றன.








Post a Comment

0 Comments