Subscribe Us

header ads

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்தவர்கள் அனைவரும் தமது தாய் நாட்டை மீண்டும் தம்மிடமே தந்துள்ளனர் - விமல் வீரவங்ச


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்தவர்கள் அனைவரும் தமது தாய் நாட்டை மீண்டும் தம்மிடமே ஒப்படைக்குமாறு செய்தியொன்றை முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல, நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

கடந்த பத்தாம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அந்த கடமையும் எமக்கு உள்ளது.

மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வாக்களித்து கடந்த மூன்று வருட ஆட்சியில் பயனில்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.

இந்த தேர்தலின் பின்பும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தொகுதிகளை தம்முடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்ள முற்பட்டால் அதற்கான தீர்வினையும் மக்கள் விரைவில் வழங்குவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments