Subscribe Us

header ads

மக்கள் காங்கிரஸின் காத்தான்குடி காரியாலயம் தீக்கிரையாக்கப்பட்டமைக்கு ரிஷாட் கடும் கண்டனம்!

-ஊடகப்பிரிவு-


காத்தான்குடியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல்காரியாலயம் தீக்கிரையாக்கப்பட்டமை ஒரு மிலேச்சத்தனமான செயலென்றும், இந்த நாசகார செயலில் ஈடுபட்டோரைக்கைது செய்ய உடன் நடவடிக்கை எடுக்குமாறும்அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காத்தான்குடியில் அகில இலங்கைமக்கள் காங்கிரஸின் முதன்மை வேட்பாளரும், ஊடகவியலாளருமான ரீ.எல்.ஜவ்பர்கானின் கட்சிக் காரியாலயம் இன்று அதிகாலை (27)தீக்கிரையாக்கப்பட்டசம்பவத்தை அடுத்தே,அமைச்சர் இவ்வாறான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளர்.

இந்தச்செயல் தொடர்பாகபொலிஸ் உயரதிகாரியுடன் தொடர்புகொண்ட அமைச்சர் ரிஷாட், சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களைக் கைது செய்யுமாறும், அந்தப் பிரதேசத்திலுள்ள தமது கட்சிக் காரியாலயங்களுக்குத் தக்க பாதுகாப்பு வழங்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

கிழக்கில்மக்கள் காங்கிரஸின் எழுச்சியைப் பொறுக்கமாட்டாத தீய சக்திகள், திட்டமிட்டு இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றுகுற்றஞ்சாட்டிய அவர், எத்தனைதடைகள்வந்தாலும் எமது அரசியல் நடவடிக்கைகளைநாங்கள்ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்றும் கூறினார்.





Post a Comment

0 Comments