பாகிஸ்தானில் முஹம்மட் ஷரீப் என பிரதமர் ஒருவர் இல்லையெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டிலுள்ள முதலாளி ஒருவருடனேயே தொலைபேசியில் கதைத்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள உர தட்டுப்பாட்டை நீக்குவதற்கு பாகிஸ்தான் பிரதமரும் தனது அன்பருமான முஹம்மட் ஷரீபுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் அவர் உடனே அதனை அனுப்ப ஏற்றுக் கொண்டதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
நாட்டில் தற்பொழுது குறைந்த விலையில் எப்படிப் போனாலும் எத்தனை கொடுத்தும் வாங்குவதற்கு உரம் இல்லாதுள்ளதாகவும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பு கொண்டவர் பாகிஸ்தான் பிரதமராக இருந்திருந்தால், நாட்டில் ஓரளவேனும் உரப் பற்றாக்குறை குறைந்திருக்கும் எனவும் நேற்று(22)ஹம இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. சுட்டிக்காட்டினார்.
0 Comments