Subscribe Us

header ads

ஷேக் ஜாயித் பெயரில் இலங்கையில் புதிய கிராமம் உருவாக்கம்!



துபை தர்ம அறக்கட்டளையின் உதவியுடன் இலங்கையில் ஷேக் ஜாயித் பெயரில் புதிய கிராமம் உருவாக்கப்பட உள்ளது.

மறைந்த அமீரக ஆட்சியாளர் ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களின் தயாள குணத்தை போற்றும் வகையில் அவரது பெயரால் சிறு கிராமம் ஒன்றை துபையில் செயல்படும் தர்ம அறக்கட்டளை ஒன்று இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள அல் மனார் பகுதியில் சமுகத்தில் மிகவும் நலிந்த நிலையிலுள்ள எளிய மக்களுக்காக அமைத்து வருகிறது.

சுமார் 50 வீடுகள், 270 பேர் தொழக்கூடிய ஒரு பள்ளி, 240 பேர் படிக்கக்கூடிய ஆரம்பநிலை பாடசாலை, மின் மோட்டாருடன் 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி, 4 அறைகள் கொண்ட மருத்துவ நிலையம், 4 குடிநீர் ஆழ்துளை கிணறுகள் போன்ற அடிப்படை வசதிகளுடன் இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் இலங்கையின் கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து கட்டி வருகிறது. இதில் கிணறுகளுக்காக மட்டுமே சுமார் 1.825 மில்லியன் திர்ஹம் செலவிடப்படுகிறது.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

Post a Comment

0 Comments