Subscribe Us

header ads

பயா பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்வும் பட்டமளிப்பு விழாவும் (படங்கள் இணைப்பு)

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


பயா பாலர் பாடசாலை வருடா வருடம் ஏற்பாடு செய்து நடாத்தி வரும் வருடாந்த கலை நிகழ்வு மற்றும் பட்டமளிப்பு விழாதெஹிவளை எஸ். டீ. எஸ். ஜயசிங்க மண்டபத்தில் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.

பயா பாலர் பாடசாலையின் பணிப்பாளர் அல் ஷமீல் கஸ்ஸாலி தலைமையிலும் பாடசாலையின் அதிபர் பௌமியா ஷமில் ஏற்பாட்டிலும் இடம்பெற்ற இவ்விழாவில்வைத்திய ஆலோசகர்ஊட்டச்சத்து மற்றும் உணவு ஊட்டும் நிபுணர் திருமதி நூர் இக்பால் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இவ்விழாவில்சிறார்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. சிறார்களுடைய கலை நிகழ்வுகள் அனைத்தும் அதிதிகள் மற்றும் பாரவையாளர்களைக் கவரும் வகையில் அமைந்திருந்தன.

ஆங்கில மொழி மூலம் 50க்கு மேற்பட்ட சிறார்களைக் கொண்டியங்கும்  இப்பாலர் பாடசாலைஇளம் பராயத்திலிருந்து  கடைப்பிடிக்க வேண்டிய செயற்பாடுகள் மற்றும் நன்நடத்தைகள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டுஅதனை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தி அவர்கள் முன்னணியில் திகழ்கின்றனர்.

நிகழ்வின் இறுதியில் பாலர் சிட்டுக்களுக்கு பட்டமளிப்பு மற்றும் சான்றிதழ்கள் என்பன பிரதம அதிதியால் வழங்கப்பட்டன.

ஆசிரியர்கள்கல்விமான்கள்பெற்றோர்கள் என பல தரப்பினரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments