கல்பிட்டியில் முழுமையாக இஸ்லாமிய முறையில் இயங்கும் முன்பள்ளிகளில் ஒன்றான மண்டலக்குடா மஸ்ஜூதுல் ரஹ்மான் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் நான்காவது வருடமாக நடைபெற்ற மாணவர் பிரியா விடை பரிசளிப்பு நிகழ்வில் சகோதர் இக்மால் அவர்களின் ஏற்பாட்டில் ,முன்னால் கல்பிட்டி உலமா சபை தலைவர் மெளலவி நிஸாமுதீன் அவர்களும்,கல்பிட்டி முன்னால் பிரதேச சபை உறுப்பினர் AJ.M.தாரிக் அவர்களும் ,கல்பிட்டி முன்னால் எதிர் கட்சி தலைவர் ஆப்தீன் அலாவுதீன் அவர்களும்,சின்னக்குடியிருப்பு மீனவர் சங்க தலைவர் சகோதரர் பஸீர் அவர்களும் ,மண்டலக்குடா மீனவர் சங்க தலைவர் சகோதரர் முஸவ்விர் அவர்களும் ,மண்டலக்குடா கிராம சேவகர் பைனஸ் G.S.அவர்களும் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இம்மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் பரிசில்களாக வழங்கப்பட்டன இப்பெருமதி வாய்ந்த பாடசாலை உபகரணங்களை முன்னால் பிரதேச சபை உறுப்பினர்களான A.J.M.தாரிக் அவர்களும் ,ஆப்தீன் அலாவுதீன் அவர்களும் இணைந்து பாடசாலைக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
பாலர் பாடசாலையின் இறுதி நிகழ்வான இந்நிகழ்வுகள் அதிகமான செலவுகளுடன் ஆடல் பாடல்களுடன் கலைவிழா என்ற பெயரில் பிரமாண்டமாக ஏனைய பாடசாலைகளில் நடைபெற்று வரும் இவ்வேளையில் எளிமையாக இஸ்லாமிய விழிப்புணர்வு உரைகளுடன் இந்நிகழ்வு நடைபெற்றது முக்கிய அம்சமாகும் இது எனது முதல் அனுபவமாகும்.
-Rizvi Hussain-
0 Comments