ஆலிம்கள் மதரஸாக்கள் குறித்து சமூகத்திடம் தெளிவான பார்வையோ வேலைத்திட்டமோ இல்லாமை பாரிய சவாலாகும்.
கதீப்மார்களின் அறபு மதரஸா உஸ்தாத்களின் தராதரங்களுக்கு ஏற்ப குறைந்தபட்ச்ச மாத சம்பளம் 40,000 ரூபாய்களில் இருந்து அதற்கு மேல் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
அவர்களுக்கான மருத்துவ காப்புறுதிகள் தொழில்சார் சலுகைகள் உரிமைகள், விடுமுறைகள், ஓய்வூதியம் என இன்னோரன்ன விடயங்கள் உறுதி செய்யப்படுதல் வேண்டும்.
அறபு மத்ரஸாக்களில் க.பொ.த உயர்தரம் வரை அரச பரீட்சைகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
வாழ்வாதார, தொழில், தொழில் நுட்ப கற்கைகள், இஸ்லாமிய நிதியியல், வர்தகம், முகாமைத்துவம், மனித வள விருத்தி போன்ற காலப் பொறுத்தமான தொழில் நிபுணத்துவ கற்கைகளும் பாடவிதானங்களில் உள்வாங்கப்படல் வேண்டும்.
இஸ்லாத்தைப் பொறுத்தவரை சமூகத்தில் தங்கி வாழ்கின்ற ஒரு “மத குரு பீடம்” கிடையாது , சகலரும் உழைத்துண்டு வாழ்வதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது, யாசகம் அது எந்த வடிவில் இருந்தாலும் அதனை இஸ்லாம் ஊக்கு விப்பதில்லை!
சகல அறபு மத்ரஸாக்களினதும் பாடவிதானங்களை ஒருமுகப்படுத்தி தேசிய அளவிலான உயர் தராதர பரீட்ச்சை முறையொன்றை அறிமுகம் செய்தல் வேண்டும்.
வருடாவருடம் உள்வாங்கும் மாணவர் தொகையை எண்ணிக்கையை (சனத்தொகைக் கேற்ப தேவையினை மதிப்பீடு செய்து) பாதியாக குறைத்து தராதரங்களை அதிகரிக்க வேண்டும்.
வருடா வருடம் சுமார் 3000 மாணவர்களை முழு நேர இலவசக் கற்கைக்காக உள்வாங்க வேண்டியிருப்பதனையும் அதன் சமூக பொருளாதார பரிமாணங்களையும் தராதரங்களையும் ஆராய விஷேட நிபணர் குழு ஒன்றை அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் கல்விப்பிரிவு உடனடியாக நியமிக்க வேணாடும்.
தற்போது நன்கொடைகளில் இயங்கும் 200 ற்கும் மேற்பட்ட மதரஸாக்களயும் முஸ்லிம் விவகார அமைச்சினால் மதிப்பீடு செய்து துறைசார் நிபுணர் குழுவொன்றின் மேற்பார்வையின் கீழ் கொண்டு வருதல் வேண்டும்.
வருடா வருடம் வெளியேறும் சுமார் 2500 ற்கும் மேற்பட்ட ஆலிம்கள் ஹாபிஸ்களது வாழ்வாதாரம், தொழில் என எதிர்காலம் குறித்த தெளிவான திட்டங்கள், வழிகாட்டல்கள் இல்லாமை பாரிய குறைபாடாகும்.
சிறார்களூக்கான ஹிப்ழு மத்ரஸாக்களில் ஆரம்பக்கல்வியை கற்கின்ற அடிப்படை உரிமை மீறப்படாதிருப்பதனை உத்தரவாதம் செய்தல் வேண்டும்.
சமூகத் தளத்தில் இருந்து முற்றாக மாணவர்களை பிரித்தெடுத்து நீண்ட கால வதிவிடக் கற்கைகளுக்குப் பின்னர் விடுவிக்கும் பாரம்பரிய முறை கோளாறுகள் நிறைந்தது; தனிமனித, குடும்ப, சமூக தேசிய வாழ்வில் அன்றாட ஈடுபாடு ஒரு இலட்சியப் பணியின் அடிப்படை அமசமாகும்.
பிரிவேனா மாணவர்களுக்கு அரசு வழங்கும் சகல வளங்களும் சலுகைகளும் சீருடைகள் காப்புறுதிகளும் அறபு மதரஸா மாணவர்களுக்கும் விகிதாசார உரிமையுடன் பெறப்பட வேண்டும்.
நாட்டின் பொதுவான தனியார் நிறுவனங்களிற்கான வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் கடப்பாடுகளையுடைய நிர்வாக முகாமைத்துவங்களை அவை கொண்டிருக்க வேண்டும்.
இனாமுல்லாஹ்
0 Comments