Subscribe Us

header ads

சவுதியில் திருமணத்திற்கு சென்ற மணப்பெண்ணின் கார் தீப்பற்றியதால் மரணம் அடைந்தார்.



சவுதி அரேபியா, அல் மஹத் கவர்னரேட் (Al Mahd governorate) பகுதியைச் சேர்ந்த புது மணப்பெண் ஒருவர் திருமணம் நடைபெறும் இடத்திற்கு உறவினர்களுடன் சென்று கொண்டிருந்த போது கார் திடீரென தீப்பற்றியதால் அவரும் அவருடனிருந்த மற்றொருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் இருவர் கடும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய புள்ளி விபரத்தின்படி, சவுதியில் நடைபெறும் துர் மரணங்களில் பெரும்பாலனவை சாலை விபத்துக்கள் மூலமே ஏற்படுகின்றன என்றும் சராசரியாக மணிக்கு ஒருவர் என உயிரிழப்பதாகவும், சவுதியில் ஆண்டுக்கு சுமார் 460,000 வாகன விபத்துக்கள் நேர்வதாகவும் தெரிய வந்துள்ளது.

2017 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை சமார் 7,000 பேர் சாலை விபத்துக்களில் மரணமடைந்துள்ளனர். 2016 ஆம் ஆண்டில் சுமார் 9,000 பேர் மரணமடைந்துள்ளனர். இது சவுதியில் நிகழ்ந்த ஒட்டுமொத்த மரணத்தில் சுமார் 12 சதவிகிதமாகும். இது 2007 ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டு வரும் சாலை விபத்து மரணங்களிலேயே மிக அதிகமான சதவிகிதமாகும்.

Source: StepFeed / Msn
தமிழில்: நம்ம ஊரான்

Post a Comment

0 Comments