Subscribe Us

header ads

வாக்களிப்பிலிருந்து தவிர்ப்பது எதிர்ப்பதாகிவிடாது..


இவ்வாட்சியானது முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவுடன்அமைக்கப்பட்டுள்ளதானது யாவரும் அறிந்த வெளிப்படையான உண்மைஉண்டவீட்டுக்கு இரண்டகம் செய்வதைப் போல இவ்வாட்சியானது முஸ்லிம்களுக்கு பாரியவரலாற்று துரோகங்களை செய்து கொண்டிருக்கின்றது.அந்த வகையில் சில நாட்கள்முன்பு இவ்வரசினால் நிறைவேற்றப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற சட்டத்திலும் பாரியஅநீதிகள் இழைக்கப்பட்டுள்ளன.

இதனை நாங்கள் மாத்திரம் கூறவில்லைஅதற்கான வாக்கெடுப்பை முஸ்லிம் கட்சிகள்அனைத்தும் புறக்கணித்து இழைக்கப்பட்டுள்ள அநீதியை வெளிப்படுத்தியுள்ளன.முஸ்லிம் அரசியல் வாதிகள்  இவ்வாட்சியாளர்களுக்கு அஞ்சி செயற்படுபவர்கள்என்பதை பல விடயங்கள் மூலம்  அறிந்துகொள்ளலாம்அவர்களே வாக்களிக்காதுபுறக்கணிக்கின்றார்கள் என்றால்அதனை எதிர்த்து பேசுகிறார்கள் என்றால் அதன்பாரதூரம் எந்தளவு இருக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள்.

இப்படி பாரதூரமான விடயம் இவ்வாட்சியில் நடந்தேறியிருந்தும் இதனை யாருமேகணக்கில் கொள்வதாக இல்லைஇப்படி பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளமையும்குறிப்பிடத்தக்கதுநாம் இப்படி உள்ளவரை எமது தலையில் எமது தலையில் மிளகாய்அரைத்துக்கொண்டே இருப்பார்கள் என்பதில் ஐயமில்லைமுன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸ காலத்தில் இப்படியான சம்பவங்கள் நடந்தேறிய போது  நாம் எப்படியெல்லாம்எதிர்த்து செயற்பட்டோமோஅப்படியான  எதிர்ப்புக்களை தற்போதும் வெளிப்படுத்தவேண்டும்.

இன்று முஸ்லிம் கட்சிகள் இதனை எதிர்த்து  வாக்களிப்பிலிருந்து விலகிக் கொண்டதாககூறி பெருமைப்பட்டுக்கொள்கிறார்இப்படி பெருமை பட்டுக்கொள்ள வெட்கமில்லையா?ஏன் இதனை எதிர்த்து வாக்களிக்க முடியாதுவாக்களிப்பிலிருந்து தவிர்ந்து கொள்வதுநடுநிலை வகிப்பதாக பொருள்படும்இது எந்த வகையில் நியாயமாகும்.

 அஹமட்
ஊடக செயலாளர்,
முஸ்லிம் முற்போக்கு முன்னனி.

Post a Comment

0 Comments