Subscribe Us

header ads

கடற்கரை ஓரம் உப்பின் காரம் புத்தளக் கடற்கரை ஓரமாம் உப்புத்தள உப்பின் காரமாம் (ஹயாமின் கவிதை)

கடற்கரை ஓரம் உப்பின் காரம் புத்தளக் கடற்கரை ஓரமாம் உப்புத்தள உப்பின் காரமாம்

இலங்கையிலே உப்புக்கென சிறப்பு பெற்ற பிரதேசங்களில் புத்தளத்து உப்பே சிறந்து விளங்குகின்றது. 

புத்தளம், ஆனை இறவு, அம்பாந்தோட்டை போன்ற பிரதேசங்களில் உப்பளம் காணப்பட்ட போதிலும் புத்தள உப்புக்கே கேள்வி அதிகமாக காணப்படுகிறது.

உப்புத்தளத்தின் உப்பை பற்றி புகழ் பாடாத கவிஞனும் இல்லை உப்புத்தளத்தின் உப்பை பற்றி புகழ் பாடப்படாத கவிதையும் இல்லை.

புத்தளம் என நம்மூர்க்கு சிறப்பு பெயர் வர காரணமும் இவ் உப்புதளமே.

அக் காலத்தில் உப்புதளம், உப்புதளம் என்று கூறி வந்த சினைப் பெயர் கொண்ட நம்மூர் பிற்காலத்தில் புத்தளமாக தோற்றம் பெற்றது.


உப்பின் மகிமையை பற்றி கூற போனால் கூற முடியாத நம்பகத்தன்மை அற்ற பல்வேறு விடயங்களை உற்று நோக்கலாம். 

"உப்பில்லா பண்டம் குப்பையிலே"

என்ற பழமொழி வாசகத்தின் கீழ் ஒரு உண்ணும் உணவாயினும் அவ்வுணக்கு உப்பு அத்தியாவசிய ஒன்றாக காணப்படுகிறது என்பதை தொக்கு நிற்கின்றது. 

நமக்கு தெரிந்த உப்பு வெரும் கறிக்கு போடவே மட்டுமின்றி அவ்வுப்பை அறிஞசர்கள் எவ்வளவு முக்கியத்துவம் படுத்திருக்கின்றார்கள் என நமக்கு அறியாத புதிராக இருக்கின்றது. 

உப்பின் உணர்ச்சியான காரத்துக்கும். 

மனிதனின் உணர்ச்சியான நன்றிக்கும்.

ஒப்பிடுகின்றனர் நம்மூரின் காரத்திற்கென பிரசித்து பெற்ற உப்பை.....

"உப்பிட்டவரை உள்ளளவு நினை"

உப்புக்கும் ஒரு மாமனிதனின் நன்றி தன்மைக்கும் இக் காரம் நடுவில் இருந்து தாங்குகிறது.

உப்புத்தளத்தின் உப்புக்கு உள் நாட்டில் மட்டுமின்றி வெளி நாடுகளிலும் கேள்விகள் அதிகரித்து கொண்டே செல்கின்றன.

பூத்துக்குழுங்கும் புத்தளத்தின் வளமான உப்பின் காரத்துக்கு முதலில் பங்கு செலுத்துவது நம்மூர் சிறு கடலே. 

பெருங்கடல் நீரை விட சிறுங்கடல் நீரே அதிகம் அதிகம் காரத் தன்மையை கொண்டு சிறப்பிக்கின்றது. 

நம்மூர் சிறுங்கடல் செல்வஞ்செழிப்புடன் உப்பளத்திற்கு பெரிதும் பங்களித்த வண்ணமே காணப்படுகின்றது.

உப்பளங்களுக்கு அருகில் கடல் காணப்படுவதால் உப்பு நீர்க்கு பஞ்சம் ஏற்படுவதில்லை புத்தளத்திள்.

மழை காலத்தில் உப்பின் விலை அதிகரித்தும் வெயில் காலத்தின் உப்பின் விலை குறைந்தும் காணப்படுவதே நம்மூரின் செழிப்பு.

இவ்வுப்பளம் மூலம் பல தொழிளாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கபட்ட வண்ணமே இருக்கின்றன.


செல்வந்தன் உன்னும் பீசாவாக இருக்கட்டும், ஏழை குடிக்கும் கூலாக இருக்கட்டும்,  உப்பில்லையேல் இரண்டும் ஒன்று தான்.

உப்பின் மகிமை பீசா உன்னும் போதும் விளங்குவதில்லை கூல் குடிக்கும் போது அறிவதில்லை. 

கொஞ்சம் கூடவோ அல்லது குறையவோ ஒரு உணவிற்கு உப்பு வழங்கப்பட்ட போதே விளங்குகின்றது.

ஏன் ஒரு மனிதனுக்கு வியர்க்கும் போது வெளியாகும் வியர்வை கூடி உப்பாகவே வெளியாகிறது. 

ஒரு நாளைக்கு 10 கிராம் உப்பே ஒரு மனிதனின் உடலில் சேர வேண்டும் என்றே நியதி. ஆனால் உப்பின் மகிமையால் அதை விட அதிகமாகவே நாம் உண்டு விடுகிறோம்.

உப்பினாள் குணமாகாதே நோயே இல்லை இதுவே நிதர்சன உண்மை.

அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே என்ற வாசகம் மாறி அகர முதல் சாப்பாடு எல்லாம் உப்பு முதற்றே உலகு என்ற வாசகம் வர நம்மூரின் சிறப்பான வளம் உப்பே தொக்கி நிற்கின்றது.

மாமியார் சிடுசிடுப்பு
மருமகள் கடுகடுப்பு
கணவன் படபடப்பு
மனைவி நச்சரிப்பு
டீன் ஏஜ் பரபரப்பு
ஓல்ட் ஏஜ் தொணதொணப்பு
அரசியல் வாதிகள் ஆர்பரிப்பு
மாணவர்கள் ஏய்ப்பு
வக்கீல்கள் ஒத்திவைப்பு
டாக்டர்கள் புறக்கணிப்பு

ஆனால் அனைவருக்கும் பயனளிக்க கூடியது #புத்தள_உப்பு.

-Hayam Mohamed-

Post a Comment

0 Comments