உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் யாசின்கஞ்ச் பகுதியில் ஜமியா கதீஜ்துல் குப்ரா லீலாப்னத் என்ற பெயரில் மதரசா ஒன்று இயங்கி வருகிறது. இது சிறுமிகளின் விடுதியாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இதுபற்றி சையது முகமது ஜிலானி அஷ்ரப் என்பவர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இதனை தொடர்ந்து மூத்த எஸ்.பி. தீபக் குமாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த மதரசா விடுதியில் 101 சிறுமிகள் வசித்து வந்த நிலையில் போலீசார் மீட்கும்பொழுது அங்கு 52 பேரே இருந்துள்ளனர். மற்ற சிறுமிகள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளனர் என நம்பப்படுகிறது.
இந்த மதரசாவில் இருந்து மீட்கப்பட்ட சிறுமிகள் போலீசாரிடம் கூறும்பொழுது, மதரசா மேலாளர் பாலியல் அத்துமீறலில் தங்களிடம் ஈடுபட்டார் என கூறியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிறுமிக்கு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. இதனை அடுத்து அந்த சிறுமிகள் லக்னோவில் உள்ள பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவத்தில் சிறுமிகளை தவறாக பயன்படுத்தி வந்த மதரசா மேலாளர் முகமது தையப் ஜியா போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
0 Comments