Subscribe Us

header ads

பாலஸ்தீன நாட்டில் காசா நகரில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 2 பேர் பலியாகினர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

காசா நகரில் அமெரிக்காவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தன. அவர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் பலியாகினர்.

இந்த நிலையில், காசா நகரின் மத்தியில் அமைந்த நஸீரத் பகுதியில் இஸ்ரேல் படையினர் இன்று வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளனர்.   இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

Post a Comment

0 Comments