எரிபொருள் தட்டுப்பாடு குறித்து கூட்டு எதிர்க்கட்சியின் மூக்கை உடைக்க பாய்ந்த மனோகணேசன் தனது மூக்கை தானே உடைத்துக்கொண்டுள்ளார் என பாராளுமன்றஉறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில்...
இலங்கை நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடானது அதிக சர்ச்சைக்குரிய விடயமாகமாறியுள்ளது. இது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி இவ்வரசையும் இந்திய நிறுவனமானஓ.ஐ.சி நிறுவனத்தையும் குறை கூறி வருகிறது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மனோகணேசன் எரிபொருள்தட்டுப்பாடு நிலவ கூட்டு எதிர்க்கட்சியினர் கூறுவது போன்று இந்தியா காரணமல்ல,எரிபொருளை சேமித்து வைக்காமையே காரணமாகும் என கூறியுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினராவது இந்தியாவை குறை கூறுகின்றனர். ஆனால்,மனோகணேசனோ இவ்வாட்சியையே குறை கூறுகிறார். அவர் கூறும்விதத்தில்நோக்கினாலும் பிழை இவ்வரசின் பக்கமே! இதனை அவர் தனது வாயாலேயேஒப்புக்கொண்டுள்ளார். ஒரு அரசின் ஆட்சிப் பிழையை ஆட்சியின் முக்கியஸ்தர்களேஏற்றுக்கொள்ளும் வகையில் தான் இவ்வரசின் போக்கு அமைந்துள்ளது. மனோகணேசனின்குறித்த கருத்து மூலம் அவராகவே தனது மூக்கை உடைத்து கொண்டுள்ளார்.
இதில் இன்னுமொரு முக்கிய விடயமுள்ளது. இவ்விடயத்தில் மனோகணேசன் இவ்வரசுவிமர்சனத்துக்குள்ளாவதை விட இந்தியா விமர்சனத்துக்கு உட்படக் கூடாது என்பதில்குறியாக உள்ளார் என்பதாகும். அவர் இந்தியாவுக்காக இவ்வரசையும் பலி கொடுக்க தயார்.இன்று இப்படி சிறந்த நாட்டின் மீது பற்றுக்கொண்டவர்களே நாட்டை ஆண்டுகொண்டிருக்கின்றனர்.
0 Comments