ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட்டின் கல்விக்கு கரம் கொடுப்போம் திட்டத்தின் நான்காம் கட்டம் ஏறாவூர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்தில் இடம்பெற்றது,
இதன் போது 300க்கும் மேற்பட்ட தரம் ஒன்று முதல் 5 வரையான பிள்ளைகளுக்கு கற்றலட உபகரணங்களுடன் கூடிய புத்தகப்பைகள் வழங்கப்பட்டன.
இதன் போது பெருமளவிலான மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டிருந்தனர்,
முன்னாள் முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட்டின் கல்விக்கு கரம் கொடுப்போம் திட்டத்தின் ஊடாக 5 ஆயிரம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பை வழங்கும் திட்டம் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது,
இதன் ஐந்தாம் கட்ட நிகழ்வு இன்று ஏறாவூர் பஷீர் சேகுதாவூத் வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது,
0 Comments