![]() |
FILE PICTURE |
கவிஷ்கா கல்ஹாரி எனும் 10 வயதுடைய சிறுமியே சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவின் பெண் பொறுப்பாதிகாரியிடம் இவ்வாறு கூறி தந்தையிடமிருந்து பணம் பெற்றுத் தருமாறு கோரியுள்ளார்.
போதைப் பொருட்களுக்கடிமையாகிய கவிஷ்காவின் தந்தை குடும்பத்தை விட்டு பிரிந்து ஐஸ்கிரீம் வியாபாரம் செய்து அதிலிருந்து பெரும் பணத்தை மது மற்றும் போதைப் பொருட்களுக்கு செலவிடுவதாகவும் கவிஷ்காவின் தாயார் தெரிவித்தார்.
சிறுவர் மற்றும் மகளிர் விவாகார அதிகாரிகளின் கண்களை கலங்க வைத்த கவிஷ்காவின் நிலை 10 வயது சிறுமி ஒருவரால் தாங்கிக் கொள்ள முடியாத கொடுமையாகும்.
கவிஷ்கா தனது கதையை பொலிஸ் நிலையத்தில் கூறுகையில்
“அப்பா வீட்டுக்கு வருவதில்லை அதனால் எங்களுக்கு சாப்பிட கொடுப்பதற்காக அம்மா வீட்டு வேலைக்கு காலையில் மாலையில் தான் வீட்டிற்கு வருவார். பெரும்பாலும் எங்களுக்கு மதியம் சாப்பிட எதுவும் இருப்பதில்லை. பசி ஏற்படும் போதெல்லாம் தண்ணீர் குடித்து விட்டு தான் நானும் எனது அக்காவும் இருப்போம்”
கவிஷ்காவின் 16 வயது சகோதரி பஸ் சாரதி ஒருவரினால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு 6 மாத கர்ப்பிணி.
தனது பிஞ்சி வயதில் பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் கவிஷ்காவின் குடும்ப சூழ்நிலையை மேம்படுத்துவதற்கும் அடிப்படைத் தேவையான கல்வியை வழங்குவதற்கும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவனர் அப் பிரதேச கிராம அதிகாரியின் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.
0 Comments