Subscribe Us

header ads

இலங்கைச் சூழலில் "உழ்ஹியா" என்பது மாட்டு வியாபாரிகளின் மாபியாவாக மாறியிருக்கிறது


ஹஜ்ஜுப் பெருநாள் நெருங்கும்போது "உழ்ஹியா பாேட்டோக்களை சமூக வளைத்தளங்களில் பகிரவேண்டாம்" என்ற ரெடிமேட் பதிவை பகிர்வதை வழக்கமாக  கொண்டிருந்த எமது பேஸ்புக் சமூகம், இம்முறை உழ்ஹியா குறித்த ஒரு காத்திரமான கலந்துரையாடலை ஆரம்பித்து இருக்கிறது.


"உழ்ஹியா" ஒரு குறிப்பிட்ட காலத்தில் செய்யப்படவேண்டிய ஒரு முக்கியமான அமல் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.


"உழ்ஹியா" என்ற சுன்னாவுக்காக செலவு செய்யும் பணத்தை வேறு சமூகவிடயங்களுக்கு பயன்படுத்துங்கள் என்று கட்டாயப்படுத்தும் உரிமையை இஸ்லாம் யாருக்கும் வழங்குவுமில்லை.

நிற்க.

இலங்கைச் சூழலில் "உழ்ஹியா" என்பது மாட்டு வியாபாரிகளின் மாபியாவாக மாறியிருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.


"ஹஜ் சீசன்" வருவதற்கு இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பே ஆடு மாடுகளை இந்த வியாபாரிகள் பதுக்கிவிடுகிறார்கள்.


பெருநாள் நெருங்கியதும் சந்தையில் வேண்டிய அளவு ஆடு, மாடுகள் கிடைக்கின்றன. 

ஆனால் கண்ணை பொத்திக் கொண்டு விலை சொல்கிறார்கள்.


எவ்வளவு விலை சொன்னாலும் குறித்த காலத்தில் விற்பனை செய்ய முடியும் என்பது இந்த வியாபாரிகளுக்கு நன்றாகத் தெரியும்.


"இலாபம்" என்ற பெயரில் இந்த வியாபாரிகள் கொள்ளை அடிக்கும் பணமும் எமது சமூகத்தின் ஏழைகளுக்கு  போய்ச் சேரவேண்டியது என்பதை நாம்உணர வேண்டும்.


இதற்கான தீர்வு குர்பான் கொடுப்பதை நிருத்துவதோ அல்லது வேறு சமூக சேவைகளுக்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்துவதோ அல்ல.

இந்த "சீசன் வியாபாரிகளின்"மாபியாவை ஒரு சமூகமாக நாம் திட்டமிட்டு கட்டுடைக்க வேண்டும்.


இலங்கையைப் பொருத்த வரையில் ஆடு, மாடுகளை ஒரு ஊரில் இருந்து இன்னுமொரு ஊருக்கு கொண்டு செல்லும்போது அதிகமான பொலிஸ் அதிகாரிகளை "கவனிக்க" வேண்டி இருக்கிறது. இப்படி "கையூட்டுகள்"வழங்கி பின் கதவால் கொண்டுவரப்படும் பிராணிகளை அறுத்து ஒரு சுன்னத்தை நிறைவேற்றுவதன் மார்க்க நிலைப்பாட்டையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.


ஒரு சுன்னாவை நிறைவேற்ற ஒரு சமூகமாக ஒன்றிணைந்து செயற்படுகின்றோம்.


அந்த அமலின் மூலம் ஏழை மக்களின் பசியைப் போக்குகின்றோம்.

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மார்க்கத்துக்காக, சமூகத்துக்காக தியாகம்
செய்கின்றோம்.


ஒரு குறிப்பிட்ட காலத்தில் பல கோடி ரூபாய்கள் செலவு செய்து இந்த "உழ்ஹியா" என்ற அமலை நிறைவேற்றுகின்றோம்.

ஆனால் இதே மாதிரியான பல தேவைகள், மார்க்கம் வலியுருத்திய கூட்டுப்பொருப்புகள் எம் கண்முன்னே நிறைந்து கிடக்கின்றன.


அவைகளும் மார்க்கம் சொன்னவைதான், அவைகளும் "சுன்னத்து" "பர்ளு" என்ற வகைக்குள் அடங்குபவைதான்.


அவைகளும் ஏழைகளுக்கு, இல்லாதவருக்கு எம்மால் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகள்தான்.


ஆனால் அப்படியான சந்தர்ப்பங்கள் வரும்போது இந்த குர்பானியின் போது எமது சமூகத்தில் இருந்து வெளியில் வரும் கோடிக்கணக்கான பணம் வெளியே வருகிறதா ?


அப்போது இந்த பணக்காரர்களும்  பணமும் எங்கே இருக்கிறது ?


நாம் சிந்திக்க வேண்டிய இடம் இதுதான்.

குர்பானி கொடுக்கும் பணத்தை வேறுவிடயங்களுக்கு பயன்டுத்துங்கள் என்று நாம் சொல்லவில்லை.


ஆனால் இதே மாதிரி மார்க்கம் வலியுருத்திய சமூகத்துக்கு நிரந்தரத் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கக்கூடிய விடயங்கள் வரும்போதும் கூட்டாக உங்கள் பணத்தை சமூகத்துக்காக, மார்க்கத்துக்காக, மறுமைக்காக செலவு செய்யுங்கள்.


நாளை எல்லா வீட்டிலும் உழ்ஹியா கொடுக்கும் வசதி உள்ளவர்கள் உருவாகுவார்கள்.இன்ஷா அல்லாஹ்.

-Safwan Basheer-

Post a Comment

0 Comments