Subscribe Us

header ads

எமது நாடு விளையாடும் கிரிக்கட போட்டிகளை காண இந்திய கம்பனிக்கு பணம் செலுத்த வேண்டிய நிலை !


இலங்கையில் கிரிக்கட் நடாத்துவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கூட இந்திய நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதைபார்க்கும் போதுஇவ்வாட்சி நீடித்தால் முழு இலங்கையையும் இந்தியாவுக்கு தாரை வார்த்து விடுவார்கள் என்பதில் எதுவிதஐயமுமில்லை என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் டி வி சானக தெரிவித்தார்.

தங்கல்லையில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்....

சில விடயங்கள் இலங்கை நாட்டில் தொழில் நுட்ப வளர்ச்சியின்மையால் வெளிநாடுகளின் உதவிகள் பெறப்படும்எமதுஆட்சி காலத்திலும் பல விடயங்களுக்கு வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுள்ளோம் அது தவிர்க்க முடியாது.அதுமாத்திரமன்றி அனைத்து நாடுகளுடனும் புரிந்துணர்வுடன் பயணித்தால் தான் எமது நாட்டை வளர்ச்சி பாதையில்கொண்டுசெல்ல முடியும்இவைகள் எல்லாம் மறுக்க முடியாத விடயங்கள்.

இருந்த போதிலும் இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது மிக தந்திரமாக செயற்பட வேண்டும்எமது நாடு அடிமைப்படாதவகையிலும் நாட்டின் வருமானங்கள் வெளியில் செல்லாத வாகையிலான திட்டங்கள் அவசியமாகும்தற்போதைய இவ்விடயங்களின் போது எதனையும் சிந்திக்காது செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இலங்கை கிரிக்கட் விளையாட்டின் போது அனுமதி சீட்டுக்கள் வழங்குவது ஒரு இலங்கை கிரிக்கட் நிறுவனத்துக்குவழங்கப்படும்தற்போது அது பிக் மை சோவ் என்ற இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.அவர்கள் 100 ரூபாய், 1000 ரூபாய், 1500 ரூபாய் அனுமதி சீட்டுக்கள் முறையே 300 ரூபாய், 2000 ரூபாய், 3000 ரூபாய்க்கு விற்கப்படுகினைசெய்கிறார்கள்.

நாம் எமது நாடு விளையாடும் போட்டிகளை காண இந்திய கம்பனிக்கு பணம் செலுத்த வேண்டிய நிலை தோன்றியுள்ளது.

இந்த சிறிய விடயத்தை இலங்கை நிறுவனங்களால் செய்ய முடியாதாஇந்த வருமானங்கள் கூட இந்தியாவுக்குத் தான்செல்ல வேண்டுமாஅனுமதி சீட்டுக்களின் விலையை அதிகரிக்கின்ற போது இலங்கை மக்களின் கிரிக்கெட் பார்க்கும்ஆர்வம் குறைந்துவிடலாம்இதன் மூலம் இலங்கை கிரிக்கெட்டை மறைமுகமாக வீழ்த்தும் தந்திரமுமிருக்கலாம். 

இலங்கையை பொறுத்தமட்டில் கிரிக்கெட் இலாபத்தை நோக்காக கொண்டதல்லஇலங்கையின் கௌரவத்தையேபாதுகாக்கும் ஒன்றாகும்இவற்றின் காரணமாகவே இலங்கை கிரிக்கெட் இத்தனை வீழ்ச்சியுற்றுள்ளது.இவ்வரசானது நாட்டு பொதுமக்களின் முக்கியத்துவத்தை அறிந்து தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments