Subscribe Us

header ads

ஞானசார தேரர் நீதிமன்றுக்கு அறிவிக்காமல் ஜப்பான் செல்ல நான் அனுமதி வழங்கவில்லை..


ஞானசார தேரர் நீதிமன்றுக்கு அறிவிக்காமல் ஜப்பான் செல்ல நான் அனுமதி வழங்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கிண்டலாக  குறிப்பிட்டார்.


கல்முனைஅக்கரைப்பற்றுபொத்துவில்சம்மாந்துறைதிருக்கோவில் மற்றும் எரக்கமனைச் சேர்ந்த முஸ்லிம்தலைவர்களின் குழு தங்காலை கார்ல்டன் இல்லத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தது.

இதன்போது அங்கு சில முஸ்லிம் பிரமுகர்களிடம் நட்பு ரீதியாக உரையாடும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

தான் ஒருபோதும் ஞானசார தேரரை பாதுகாக்கவில்லை எனவும் அவரை தன்னுடைய அரசில் பாதுகாத்தவர்கள் இந்தஅரசாங்கத்தில் பலம் பொருந்தியவர்களாக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும்  நான்கு பொலிஸ் குழுக்கள் தேடப்பட்ட ஞானசார தேரருக்கு தான் பிணை வழங்க பணிக்கவில்லை எனவும் அவர் நீதிமன்றுக்கு அறிவிக்காமல் ஜப்பான் செல்ல நான் அனுமதி வழங்கவில்லை எனவும் அவர் கிண்டலாக  குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திணநாயகம் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வீரசிங்கஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது அம்பாறை மாவட்ட எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments