தமிழக அரசு அறிவித்த 7 லட்சம் ரூபாய் நிதியுதவியை வாங்க அனிதா குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.
பிளஸ் டூ பொதுத் தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்திருந்தும், நீட் தேர்வு காரணமாக, மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காததால், அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு, 7 லட்சம் ரூபாய் நிதியுதவியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்குவதாக, முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதையடுத்து, அனிதா வீட்டிற்கு சென்ற அரியலூர் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பிரியா, அவர்களிடம் அளித்த காசோலையை வாங்க, அனிதா குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.
பிளஸ் டூ பொதுத் தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்திருந்தும், நீட் தேர்வு காரணமாக, மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காததால், அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு, 7 லட்சம் ரூபாய் நிதியுதவியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்குவதாக, முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதையடுத்து, அனிதா வீட்டிற்கு சென்ற அரியலூர் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பிரியா, அவர்களிடம் அளித்த காசோலையை வாங்க, அனிதா குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.
இதையடுத்து, அவரது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பிரியா, பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை, காசோலையை வாங்க மாட்டோம், என ஆட்சியரிடம் அனிதா குடும்பத்தினர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து திரும்பிச் சென்றார். (News7)
0 Comments