இணையம் மற்றும் முகநூலைப் பயன்படுத்துவோரில் ஒரு பகுதியினர் அதனைத் தவறாகப் பயன்படுத்துவதோடு பொறுப்புக்களற்ற வகையில் நடந்து கொள்வது தெளிவான விடயமாகும்.
இதனை அடிப்படையாக்க கொண்டு தடைகளை ஏற்படுத்துவதைவிட ஒட்டு மொத்தமாக இங்கு முக்கியமான விடயமாக அமைவது கருத்துத் தெரிவிப்பதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாகும். அந்த சுதந்திரத்தைப் பொறுப்புடன் பயன்படுத்திக் கொள்வது அவசியமானதாகும். சமூக ஊடகங்களின் பயன்பாட்டின் போது கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள் மற்றும் கொள்கைகள் பல உள்ளன.
நீங்கள் Community Standards ஐ வாசித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது இவை தொடர்பான அனேக விடயங்களைத் தெளிவு படுத்திக் கொள்ள முடியுமாக அமையும். அங்கு குறிபிபடப்பட்டுள்ள அடிப்படையான விடயம் என்னவெனில் தமது கணக்கை தமது பெயரிலேயே பயன்படுத்துவதாகும். முகநூலைக் கட்டுப்படுத்துவதை விட ஒவ்வொருத்தரும் அதாவது சமூகத்தினாலேயே அந்தக் கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வது சிறந்ததாகும்.
தவறான இணையப் பாவனை தொடர்பில் கடந்த ஆறு மாத காலப் பகுதியினுள் இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பேரவைக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1600 ஆகும். இவற்றில் 80வீதமானவை போலி முகநூல் பயன்பாடு பற்றிய முறைப்பாடுகளாகும்.
ஆறு மாத காலப்பகுதியினுள் இந்தளவு எண்ணிக்கையான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதால் அதில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது எனக் கூறுவதோ அந்த எண்ணிக்கையினை குறிப்பிட்டுக்காட்டுவதோ பிழையானதல்ல. இந்த விடயங்களை ஒப்பிட்டுப் பார்த்து ஆராய்வதையே செய்ய வேண்டியுள்ளது.
கிடைக்கும் முறைப்பாடுகள் அதிகரிப்பதற்கு தாக்கத்தைச் செலுத்தும் பல காரணங்கள் உள்ளன. கணினி அவசர நடவடிக்கை மையம் தொடர்பில் அறிந்திருப்போர் மற்றும் முகநூலுடன் இணைந்திருப்போர் தொகை யானது கடந்த வருடத்தை விட இவ்வருடத்தில் அதிகரித்திருப்பதும் அவற்றுள் சிலவாகும். சனத்தொகை அதிகரிப்பதும், இணையத்தள மற்றும் சமூக வலைத்தளங்களைப் பாவிப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் இன்னுமொரு காரணமாகும்.
நீங்கள் உங்களது பெயரிலேயே முகநூல் கணக்கொன்றை ஆரம்பிப்பீர்களாயின் அதனூடாக உங்களோடு தொடர்பு கொள்வதற்கு உங்களது நண்பர்கள், உறவினர்களிடமிருந்து உங்களுக்கு வேண்டுகோள்கள் வரும்.
அந்த கோரிக்கைகள் உங்களது நண்பர் பட்டியலில் இடம்பிடிப்பது அந்த கோரிக்கைகளை நீங்கள் ஏற்றுக் கொண்டால் மாத்திரமேயாகும். அதே போன்று நீங்களும் உங்களுக்குத் தெரிந்த அறிந்தவர்களை இணைத்துக் கொள்வீர்கள். நீங்கள் புகைப்படங்கள் போன்ற தகவல்களை உள்ளீடு செய்யும் போது அவற்றை உங்களுக்குத் தேவையானவர்களுக்கு மாத்திரம் பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கும் வாய்ப்புள்ளது.
உங்கள் நண்பர் பட்டியலில் இருக்கும் பாடசாலை நண்பர்கள், பல்கலைக்கழக நண்பர்கள் அலுவலக நண்பர்கள் போன்ற பல்வேறு நண்பர்களிடையே அவை யாருக்குத் தேவை என்பதைச் சிந்தித்துப் பார்த்து அவர்களுக்குச் செல்லும் வகையில் பகிர்ந்து கொள்ள முடியும். உதாரணமாக நீங்கள் பல்கலைக்கழக நண்பர்களோடு சுற்றுலா சென்ற சந்தர்ப்பத்தில் எடுத்த புகைப்படங்களை அவர்களோடு மாத்திரம் பகிர்ந்து கொள்ள முடியும்.
வெளிநாட்டில் இருக்கும் உங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு உங்களைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கும், அவர்களைப் பற்றிய தகவல்களை நீங்கள் அறிந்து கொள்வதற்கும், நீண்டகாலமாக தொடர்பில்லாதிருந்த நண்பர்களின் தகவல்களை அறிந்து கொள்வதற்கும் முகநூல் ஊடாக வாய்ப்புக்கள் உள்ளன.
கிரிக்கட் அல்லது வேறு விளையாட்டுக்கள், கேளிக்கை விடயங்கள் தொடர்பில் உங்களுக்கு ஆர்வம் இருப்பின் அவை பற்றிய தகவல்களையும், புதிய விடயங்களையும் பரிமாரிக் கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது. தற்போது அனைத்து வானொலி அலைவரிசைகளும் நேயர்களின் விருப்பங்களை வழங்குவதில் முகநூல் ஊடாக இணைந்து கொள்வோருக்கும் சந்தர்ப்பங்கள் வழங்குகின்றன. தபாலட்டைப் பாவனை குறைந்து சென்று கொண்டிருக்கின்றது. தாம் விரும்பும் பாடல்களை உடனடியாகவே வானொலி மூலம் கேட்டு ரசிக்கும் வாய்ப்புக்கள் முகநூல் ஊடாகக் கிடைத்திருக்கின்றது.
நோயாளி ஒருவருக்கு அவசரமாக இரத்தம் தேவை என்ற கோரிக்கை, சிறுநீரகம் அன்பளிப்புச் செய்யுமாறான கோரிக்கைகளும் முகநூல் வழியாக வருகின்றன. இவ்வாறான கோரிக்கைகளை அத்தேவை நிறைவேற்றப்படும் வரையில் சமர்ப்பிக்க முடியும். வெள்ள அனர்த்தம், மண்சரிவுகள் போன்ற அனர்த்தங்களின் போது சமூக நலச் சேவைகளை முன்னெடுத்துச் சென்று ஏராளமான பணிகளைச் செய்வதற்கும் இந்த முகநூல் ஊடாக வாய்ப்பு ஏற்படுகின்றது.
இவ்வாறான ஏராளமான நல்ல விடயங்கள் முகநூலை நல்ல வழியில் பயன்படுத்துவதற்கான அம்சங்களாகும். எனினும் இவை தவறான வழியிலும் பயன்படுத்தப்படுகின்றது. உதாரணமாக வெள்ள நிவாரண உதவி வழங்குவது தொடர்பான படங்களை பகிர்ந்து நிதி மோசடியில் ஈடுபடல், ஏதேனும் சந்தர்ப்பங்களில் பெறப்பட்ட படங்களை வேறு இடங்களில் பகிர்ந்து தவறான கருத்துக்கள் பகிரவும் முடியும்.
கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளினுள் 80 வீதத்திற்கு அதிகமான முறைப்பாடுகள் ஒருவரின் பெயரில் இன்னொருவர் முகநூல் கணக்கை ஆரம்பித்து செயற்படுவது தொடர்பானதாகும். ஓரிடத்தின் படங்களை வேறு இடங்களில் தேவையற்ற வகையில் பகிர்தல் போன்றவற்றை முகநூலைத் தவறாகப் பாவிப்போர் செய்கின்றனர். மோசமான படங்களாக அவை பகிரப்படாவிட்டாலும் ஒருவர் தர்மசங்கடங்களுக்கு உள்ளாகும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதும் இடம்பெறுகின்றது.
இவ்வாறான விடயங்களைச் செய்வோர் தமது குடும்ப உறுப்பினர்களின் படங்கள் அவ்வாறு செய்வதில்லை. தமது தாய், மனைவி அல்லது சகோதரிகளினது படங்களை அவர்கள் அவ்வாறு பகிர்வதில்லை.
முகநூல் ஊடாக இல்லாவிட்டாலும் இணையத்தின் ஊடாக பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி மோசடியில் ஈடுபடும் சந்தர்ப்பங்களும் உள்ளன. உதாரணமாக நைஜீரியாவில் இருக்கும் ஒருவரிடமிருந்து உங்களுக்கு நண்பருக்கான கோரிக்கை வரமுடியும். வெளிநாட்டு நண்பர் என்ற காரணத்தினால் நீங்களும் அதனை விரும்புவதற்கு அதிக வாய்ப்புள்ளது. நண்பர்களாக இரண்டு மூன்று மாதங்கள் கடந்த பின்னர் அந்த நண்பரோ அல்லது நண்பியோ உங்களுக்கு தங்க காசு அல்லது ஐபோன் ஒன்றை பரிசாக அனுப்பப் போவதாகக் கூறுவார்.
சில தினங்களில் தபாலிலிருந்து அல்லது சுங்கத்திடமிருந்து எனக் கூறி உங்களுக்கு கிடைக்கும் தொலைபேசி அழைப்பில் உங்களுக்கு வெளிநாட்டிலிருந்து பார்சல் ஒன்று வந்துள்ளது எனக் கூறப்படும். அந்தப் பார்சலைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரு தொகைப் பணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்படும். அந்த தொகையினை அரச கணக்கில் வைப்புச் செய்தால் சில தினங்கள் தாமதம் ஏற்படும் என்பதால் அந்த தொகையினை அழைப்பை ஏற்படுத்துபவரின் கணக்கில் வைப்புச் செய்யுமாறும், அப்போது துரிதமாக அந்தப் பரிசை உங்களுக்கு வழங்க முடியும் என்றும் கூறுவார்கள். இது தொடர்பில் உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வராதவாறு கவனமாக அவர்கள் நடந்து கொள்வார்கள். மறுபுறம் அவர்கள் கேட்பது பெரிய தொகையுமல்ல.
எனினும் நீங்கள் அவர்கள் கேட்கும் பணத்தொகையினை அவர்கள் கூறும் கணக்கில் வைப்புச் செய்துவிட்டு எத்தனை நாட்கள் காத்திருந்தாலும் அவர்களால் கூறப்பட்ட பரிசுகள் எதுவும் உங்களுக்கு வந்து சேரப் போவதில்லை. இதுதான் உண்மை.
இன்னொரு விடயம் இணையத்தில் வெளியாகும் விளம்பரங்களாகும். சுமார் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான கைப்பேசி ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனைக்கு உண்டு என்ற விளம்பரமாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அதிகமானோர் இதனை விரும்புகின்றனர். குறித்த கைப்பேசியைக் கொள்வனவு செய்வதற்கு அதிகமானோர் முன்வந்துள்ளதால் உடனடியாக 2000 ரூபாவை முற்பணமாகச் செலுத்துமாறு அந்த விளம்பரத்தைச் செய்தவர்களால் உங்களுக்கு அறிவிக்கப்படும்.
இது ஒரு பெரிய தொகையாக இல்லாததால் நீங்களும் அத்தொகையினை வைப்புச் செய்வதற்கு தயங்கப் போவதில்லை. எனினும் உங்களுக்கு அவ்வாறான கைப்பேசிகள் ஒரு போதும் கிடைக்கப் போவதேயில்லை.
இவ்வாறு ஏராளமானோரிடமிருந்து முற்பணங்கள் மோசடி செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் இது தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்வதற்கும் அனேகமானோர் முன்வருவதில்லை. இதனால் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களும் இல்லாமல் போகின்றன.
இவ்வாறான பின்புலத்தில் இவ்வாறான பண மோசடிகள் தொடர்ந்தும் இடம்பெறும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பொருளைக் கொள்வனவு செய்வதற்கு விரும்பினால் அது தொடர்பில் நன்கு ஆராய்ந்து பார்த்து உறுதி செய்து கொண்டதன் பின்னர் அவற்றை வாங்குவதற்குப் பார்த்துக் கொள்வதன் மூலம் மோசடிகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.
இன்னும் சில விடயங்களைச் செய்வதற்கு கீழ் வரும் நடைமுறைகளைக் கடைபிடிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதன் போது User name, Pass word கேட்கப்படும். இவ்வாறு வழங்கப்படும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி உங்களது கணக்கினை ஹேக் செய்ய முடியும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
சாதாரணமாக யாஹூ, கூகுல் போன்றன ஊடாக இணைத்துடன் தொடர்பை ஏற்படுத்தும் போது ஆரம்பத்தின் பின்னர் இடையில் கடவுச் சொல் கேட்கப்படுவதில்லை. எனவே ஏதேனும் செயற்பாட்டின் இடையில் கடவுச் சொல் கேட்கப்படுமாயின் நீங்கள் அது தொடர்பில் சிந்திக்க வேண்டும். உங்கள் கடவுச் சொல்லை மாற்றுவதற்கு விரும்பின் மெனுவில் இருக்கும் Settings க்குச் சென்று உங்களால் அதனைச் செய்து கொள்ள முடியும். இரண்டு தடவை உறுதிப்படுத்திக் கொள்ளும் நடைமுறையினை (two steps veryfication method) பின்பற்றுவது வெற்றிகரமான செயற்பாடாகும்.
அங்கு பயன்பாட்டாளரின் பெயர், கடவுச் சொல்லுக்கு மேலாக கைப்பேசி தொலைபேசி இலக்கத்தை வழங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. அப்போது எவராவது உங்களது கடவுச் சொல்லைப் பயன்படுத்தி கணக்கினுள் நுழைவதற்கு முயற்சிக்கும் போது அது தொடர்பில் உங்களுக்கு குறுஞ்செய்தி தகவல் மூலமாக அறிவிக்கப்படும். இதனால் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்வதற்கும் உங்களால் முடியும். எனவே உங்களது கணக்கு ஹேக் செய்யப்படுவதைத் தடுப்பதற்கு இந்த பாதுகாப்பு நடைமுறைகளைப் பயன்படுத்துவது சிறந்ததாகும்.
மற்றொரு சிறந்த முறையானக இருப்பது உங்கள் கணக்கின் ஊடாக பகிரப்படும் படங்கள் தேவையானவர்களுக்கு மாத்திரம் பார்க்கும் வகையில் பகிர்வதாகும். பல்வேறு மனோநிலையில் உள்ளவர்கள் இந்த சமூக வலைத்தளங்களில் இணைந்திருப்பதால் தேவையற்ற விடயங்கள் நடப்பதிலிருந்து இதன் மூலம் தவிர்ந்து கொள்ள முடியும்.
இணையம் மற்றும் முகநூலைப் பயன்படுத்துவோரில் ஒரு பகுதியினர் அதனைத் தவறாகப் பயன்படுத்துவதோடு பொறுப்புக்களற்ற வகையில் நடந்து கொள்வது தெளிவான விடயமாகும். இதனை அடிப்படையாக்க கொண்டு தடைகளை ஏற்படுத்துவதைவிட ஒட்டு மொத்தமாக இங்கு முக்கியமான விடயமாக அமைவது கருத்துத் தெரிவிப்பதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாகும். அந்த சுதந்திரத்தைப் பொறுப்புடன் பயன்படுத்திக் கொள்வது அவசியமானதாகும்.
சமூக ஊடகங்களின் பயன்பாட்டின் போது கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள் மற்றும் கொள்கைகள் பல உள்ளன. நீங்கள்Community Standards ஐ வாசித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது இவை தொடர்பான அனேக விடயங்களைத் தெளிவு படுத்திக் கொள்ள முடியுமாக அமையும். அங்கு குறிபிபடப்பட்டுள்ள அடிப்படையான விடயம் என்னவெனில் தமது கணக்கை தமது பெயரிலேயே பயன்படுத்துவதாகும். முகநூலைக் கட்டுப்படுத்துவதை விட ஒவ்வொருத்தரும் அதாவது சமூகத்தினாலேயே அந்தக் கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வது சிறந்ததாகும்.
பல்வேறு தீவிரவாத அமைப்புக்கள் மற்றும் குழுக்களும் இவ்வாறான சமூக வலைத்தளங்களை தமது செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்திக் கொள்வதால் அவை தொடர்பிலும் கவனத்தைச் செலுத்த வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்கள் தொடர்பில் முறையீடுகளைச் (சுநிழசவ) செய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஓரளவானோர் அவ்வாறு முறையீடுகளைச் செய்யும் போது அவ்வாறான கணக்குகளை தடை செய்வதற்கும், கணக்கை மூடிவிடுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
ஒழுக்க பண்புகள் ரீதியாகவும், சுய கட்டுப்பாட்டுனும் பொறுப்புடனும் சமூக வலைத்தளங்கினுள் செயற்படுவோமேயானால் முறைப்பாடுகளைச் செய்வதற்கு எந்தத் தேவையுமிருக்கப் போவதில்லை. வீதி விபத்துக்கள் ஏற்பட்டாலும் வீதிகளில் வாகனப் போக்குவரத்தைத் தடை செய்வதில்லை.
செய்ய வேண்டியது சாரதிகள் மற்றும் பயணிகளும் வீதி சட்ட ஒழுங்குகளைப் பேணி பொறுப்புடன் வீதியைப் பயன்படுத்துவதேயாகும். இங்கு இடம்பெறவேண்டியதும் அதுவேயாகும்.
முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களோடு இணைந்து செயற்படும் போது கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்கிச் செயற்படுவதாகும். இது ஒன்றும் சிக்கலான விடயமல்ல. சிறு வயதிலிருந்தே எவருக்கும் பிரச்சினைகள் கொடுக்காது, தொல்லைகள் வழங்காது வாழ்வதற்கு நாம் பழகியிருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் தோன்றப் போவதில்லை.
ஆர்.சி. தம்மிக செனவிரத்ன
இலங்கை கணினி அவசர நடவடிக்கை
பேரவையின் பிரதான தகவல்
பாதுகாப்பு பொறியியலாளர்
(புத்தளம் விஷேட நிருபர்)
0 Comments