அது தீவிரம் அடைந்திருப்பதற்கான காரணத்தை வெறுமனே கலியுகம் என்று சொல்வதோடு மட்டும் நிறுத்தி விடாமல் அதற்கான அடிப்படைக் காரணங்களை அலசி ஆராய்ந்து தீர்வு காண முயற்சிக்க வேண்டும். நவீன சாதனங்களும், கருவிகளும், வசதிகளும் அதற்கு ஓர் மறைமுகமான காரணமாக அமந்துவிடுகின்றது. சிறுவர் துஷ்பிரயோகம் என்பது இன்று தீவிரம் அடைந்திருப்பதற்கு காரணம் துஷ்பிரயோகம் இளைப்பவர் மட்டும்தானா? என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சில துஷ்பிரயோகமென்றே உறுதிப்படுத்தப்படுகின்றது. இன்னும் சில பலாத்காரத்தின் அடிப்படையிலேயே நடைபெறு கின்றது.
எப்படிப் பார்த்தாலும் துஷ்பிரயோகத்திற்கான காரணம் ஏதோ ஒரு தூண்டுதல் என்பதே உண்மையாகும். அதன் பின்னணி எங்கிருந்து வருகின்றது என்பதை அறிந்து அதற்குப் பரிகாரம் தேடவேண்டியதே அவசியம். ஒரு காலத்திலே நான்கு சுவர்களுக்கு மத்தியிலே நடைபெற்ற தாம்பத்தியமென்பது இன்று மேடைபோட்டு அரங்கேற்றப்படுகின்றது. அதற்கு பணத்தையே மையப்படுத்தி இயங்குகின்ற சினிமாத்துறை முக்கிய காரணமாக அமைகின்றது. பருவம் வந்த பின்னால் அறிந்து கொள்ள வேண்டிய பாலியல் என்கின்ற அம்சம் இப்போது பாலப்பருவத்திலேயே அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. அதனை தவறாக பயன்படுத்தும் கலாச்சாரம் தோன்றியுள்ளது.
அறிவுசார் உலகம் நவீனம் என்கின்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு அலைய விட்டிருக்கின்றது. உணர்வுகளைத் தூண்டுகின்ற மாத்திரிகைகளையும் போதைப்பொருட்களும் தாராளமாக மலிந்து போயிருக்கின்றது. கேட்கக் கூடாதவற்றை கேட்பதற்கும், பேசுவதற்குமான சாதனங்கள் இப்போது எல்லோருடைய கைகளிலேயும் தவழ்ந்து கொண்டிருக்கின்றது. இவையெல்லாம் துஷ;பிரயோகம் என்பது எந்தவகையினைச் சார்ந்திருந்தாலும் அந்த வகைகளைத் தூண்டுவதற்கான காரணங்களாக அமைந்து விடுகின்றன.
மேலும் சிறுவயதிலேயே நவீனம் என்கின்ற சாயம்பூசி ஆபாசப்படுத்தப்படுகின்ற ஆடைகளை பிள்ளைகளுக்கு பெற்றோர்களே அணிந்துவிடுகிறார்கள். ரகசியமான தங்களுடைய தாம்பத்திய உறவுகளைச் சில பெற்றோர்கள் பிள்ளைகளின் கண்களுக்குப் படும்படியாக வைத்துக் கொள்கிறார்கள். கட்டுப்பாடற்ற சில பெற்றோர்களின் செயற்பாடுகளும் சில பிள்ளைகளைக் கட்டாக்காலியாக்கி விடுகின்றன.
உரிய காலத்திலே உரியபடி பயன்பாடு மற்றம் கலாச்சாரத்தை பேணுவதும், பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே முன்னனுபவமில்லாத நபர் ஒருவரின் அனுகுமுறை தொடர்பான அறிவுறுத்தல்களை அவர்களுக்கு விளங்கும் வகையில் எடுத்துக்கூறுதல் வேண்டும்.
எமது எதிர்கால சமூகத்தைப் பாதுகாப்பதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தில் இருக்கும் ஏனைய அமைப்புகளும் முன்வருவது. காலத்தின் கட்டாயமாகும்.
-Jeezan Azeer-
0 Comments