Subscribe Us

header ads

ஓட்டமாவடி காவத்தமுனை மையவாடியை புனரமைக்கும் திட்டம் கிழக்கு முதலமைச்சரால் அங்குரார்ப்பணம்


ஓட்டமாவடி    காவத்தமுனை பிரதேச  அல் முபாரக் ஜும்ஆப் பள்ளி  மையவாடி கிழக்குமுதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டினால் புனரமைக்கப்படவுள்ளது.

குறித்த பள்ளிவாயல் மையவாடி புனரமைப்புக்கென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்அஹமட் 18 இலட்ச ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது

மையவாடி புனரமைக்கும் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்அஹமட்டினால் கடந்த வௌ்ளிக்கிழமை ஜும் ஆத் தொழுகையின் பின்னர் ஆரம்பித்து வைக்கப்பட்டது, 


.
மழைகாலங்களில் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கிவந்த காவத்தமுனைஅல்-முபாரக் ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தினரும் பொதுமக்களும் கௌரவ முதலமைச்சரிடம்விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே இந்த நிதியானது ஒதுக்கீடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மையவாடியின் ஒரு பகுதியானது மண்ணிட்டு_நிரப்பப்பட்டு_மழைகாத்தில்_எவ்வித_சிரமும்_இல்லால்_ஜனாசாக்களை_அடக்கம்_செய்வதற்கு_ஏதுவான_வகையில்_புனரமைக்கப்படும்.

கௌரவ முதலமைச்சர்மற்றும் கிழக்குமாகாண சபை உறுப்பினர் கௌரவ அல்ஹாஜ் ஷிப்லிபாறூக் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துவைத்தனர்.

நீண்டகாலமாக குறித்த பள்ளிவாயல் நிருவாகத்தினரும்பிரதேச மக்களும் எதிர்நோக்கிவந்த பாரியதொருபிரச்சினைக்கு கிழக்குமாகாண முதலமைச்சரின் ஊடாக நிரந்தரத் தீர்வு கிட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கஅம்சமாகும்.

Post a Comment

0 Comments