வேலைவாய்ப்பினை பெற்று வெளிநாடு செல்லும் அனைத்து இலங்கையர்களும் பதிவு கட்டணம் செலுத்துவது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வலியுறுத்தியுள்ளது.
இதன்படி, பணிபுரிவதற்காக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் இந்த கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"1985ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக கட்டளைச் சட்டத்தின் 51ஆம் பிரிவிற்கும் அதனை தொடர்ந்து 2009ஆம் ஆண்டு திருத்தப்பட்ட 56ஆவது பிரிவிற்கும் அமைய பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும்.
முதன் முறையாக வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்று செல்லும் பணியாளர்கள் வரி கொடுப்பனவுகள் உட்பட 17,837 ரூபா செலுத்த வேண்டும்.
அத்துடன், அதே நிறுவனத்திற்கு மீண்டும் பணிக்கு செல்லும் பணியாளர்கள் பதிவுக்கட்டணமாக 3755 ரூபா செலுத்த வேண்டும் என பணியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக விபரங்களை பத்தரமுல்ல மற்றும் கொஸ்வத்தையில் உள்ள இலங்கை வெளிநாட்டு பணியக செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என முடியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments