Subscribe Us

header ads

இலங்கை விமான சேவை வரலாற்றில் புதியதோர் திருப்பம்! என்னவென்று தெரியுமா?


இலங்கை விமான சேவை வரலாற்றில் பாரிய விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைத்தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இம்மாதம் 14ஆம் திகதி குறித்த விமானம் வருகைத்தரவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே பிரதியமைச்சர் இதை குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மற்றும் டுபாயை தொடர்புபடுத்தி இந்த புதிய விமான சேவை ஆரம்பமாகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் 6 விமானங்கள் எதிர்காலத்தில் கட்டுநாயக்க விமானநிலையத்தை கேந்திரமாக கொண்டு வரவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைக்கப்பட்ட பின்னர் பெரும் எண்ணிக்கையிலான விமானங்கள் தரையிறங்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்றும் அறிவித்துள்ளார்.
முன்னர் 45 மீற்றர் அகலத்தை கொண்டதாக இருந்த கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை தற்பொழுது இரண்டு பக்கங்களிலும் 15 மீற்றரிலிருந்து 75 மீற்றார் வரையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
3,335 மீற்றர் நீளத்தை கொண்ட விமானம் தரையிறங்க கூடிய வசதியை கொண்டதாக தற்போது விமான நிலையம் இருப்பதாகவும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments