Subscribe Us

header ads

ஊக்க மருந்து பயன்பாடு நிற்க வேண்டும்; இல்லையென்றால் விளையாட்டு மரணமடையும் - தடகள வீரர் போல்ட்


எட்டு முறை ஒலிம்பிக் சாம்பியனாக சாதித்த போல்ட் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது செய்தியாளர் ஒருவரிடம் பேசும்போது சமீபத்தில் வெளியாகிய மெலாரென் அறிக்கையில் ரஷ்ய அரசு ஆதரிக்கும் ஊக்க மருந்து பயன்பாட்டு பற்றி குறிப்பிடுகையில், “ தனிப்பட்ட முறையில் எண்ணும் போது இதை விட அடிமட்டத்திற்கு போக முடியாது என்றே கருதுகிறேன், ரஷ்யாவின் முறைகேட்டை பார்க்கும்போது இதை விட மோசமாக முடியாது என்றே தோன்றுகிறது என்றார். 

சமீபகாலமாக நிறைய வீரர்கள் இப்படி பிடிபடுகிறார்கள். தவறு செய்தால் பிடிபடுவார்கள் என்ற எண்ணம் வந்தால் காலப்போக்கில் விளையாட்டு சிறப்பாகும்” என்றார்

ஒருபுறம் கடுமையாக பணி புரிந்து சிலர் முன்னேறும் போது வேறு சிலர் அதை பின்னோக்கி நகர்த்துவது மகிழ்ச்சியான நிலையில்லை. அது கடுமையான ஒன்று. 

தனக்கு அடுத்த சாம்பியனாக யார் இருக்க முடியும் என்ற கேள்விக்கு தென் ஆப்பிரிக்காவின் நீகெர்க்கை குறிப்பிட்டுச் சொன்னார் போல்ட்.

Post a Comment

0 Comments