බොරුවක්! பச்சப் பொய்
වෛද්ය දයානාත් රණතුංග வைத்தியர் தயாநாத் ரனதுங்க
ஒருவரை மலடாக்க வேண்டும் என்றால் ஓரிரு வழிமுறைகள் மட்டும் உள்ளன.
1. லூப் (Loop) வைப்பது. பெண்ணின் உடலில் பொருத்தப்படும்.
2. உடலுறவின் போது கொண்டம் (condom ஆணுறை) பாவிப்பது.
3. கற்பத்தடை மாத்திரைகளைப் பாவிப்பது.
இவை அனைத்து வழிமுறைகள் மூலம் தற்காலிக மலட்டுத்தன்மையை உருவாக்கலாம். நிரந்தர மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவதாயின் கற்பப் பையை LRT சத்திர சிகிச்சை மூலம் நீக்க வேண்டும்.
இவை அல்லாமல், மாத்திரைகளை உணவில் கலப்பதினால் கற்பத்தடையோ மலட்டுத்தன்மையோ ஏற்படாது. வேறு மருந்துகளை உடம்பில் அல்லது உள்ளாடைகளில் தடவுவதினாலும் மலட்டுத்தன்மை ஏற்படுவதும் இல்லை, அவ்வாறான எந்தவொரு மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவும் இல்லை.
எச்.ஐ.வி. (ஏட்ஸ்) தொடர்பாக முன்பொரு காலத்தில் ஒரு பொய்யான பீதி நிலவியது. அதாவது ஓர் ஏட்ஸ் நோயாளி மாங்காய் வெட்டும்போது கை வெட்டப்பட்டு மாங்காயில் இரத்தம் பட்டு அந்த மாங்காயைச் சாப்பிட்டால் மாங்காய் திண்டவருக்கும் ஏட்ஸ் நோய் தொற்றும் என்ற பீதியைப் போன்றது இந்த மலட்டுத்தன்மை பற்றிய பீதியும்.
இதில் எந்த உண்மையும் இல்லை, பச்சப் பொய்
___________________________________
** சிங்கள இனத்தவருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவதற்காக முஸ்லிம்களினால் மருந்து தடவப்பட்ட உள்ளாடைகள், ஆடைகள் விநியோகிப்பதாகவும் உடலில் பூசும் மருந்துகளை விற்பதாகவும் மற்றும் இதுபோன்ற காரியங்களை செய்வதாகவும் இனவாதிகளினால் மேற்கொள்ளப்படும் விசமப் பிரச்சாரங்கள் மிக வேகமாகப் முன்னெடுக்கப்படும் இக் காலப்பகுதியில், வைத்தியர் தயாநாத் ரனதுங்க அவர்கள் வௌியிட்ட கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது.
வைத்தியர் அவர்களின் கூற்றை மேற்கோளாக வைத்து, உங்கள் சிங்கள மொழிமூல நண்பர்களுடன் கலந்துரையாடலாம், இன்ஷாஅல்லாஹ்
කෙනෙක්ව වඳ කරන්න නම් ක්රම කිහිපයයි තියෙන්නේ. ලූප් එකක් දානවා කියන්නේ එක ක්රමයක්. ඒකෙන් තාවකාලිකව වඳ කරනවා. එහෙම නැත්නම් සංසර්ගයේදී උපත් පාලන කොපුවක් පාවිච්චි කරන්න ඕනෑ. නැත්නම් උපත් පාලන පෙති බොන්න ඕනෑ. හැබැයි උපත් පාලන පෙත්තකින් තාවකාලිකව වඳ කරන්න විතරයි පුළුවන්. ඒවා ආහාර එක්ක මුසු කරන්න බෑ. දීර්ඝකාලීනව වඳ කරනවා නම් ගෑනු කෙනෙකුගේ ගර්භාෂය ඉවත් කරන්න ඕනෑ. ඒක එල්ආර්ටී කියලායි හඳුන්වන්නේ. ඒ හැරෙන්න බෙහෙත් ඇඟේ තවරලා, තවලා, කෑමවල මිශ්රකරලා, ඇඳුම්වල හෝ කොට්ටයක් යට මොනවා හරි තියලා කිසිකෙනෙක්ව වඳ කරන්න බෑ. එහෙම බෙහෙතක් එදිනෙදා පාවිච්චි කරන්න තබා ලෝකේ කිසිම රටක විද්යාත්මකව හොයාගෙනවත් නෑ. කලින් භීතිකාවක් තිබුණා එච්.අයි.වී. රෝගියෙක් අඹ කපද්දී අත කැපිලා අඹ ගෙඩියට ලේ මිශ්ර වුණොත් අඹ කන කෙනාට එච්.අයි.වී. බෝවෙයි කියලා. ඒ වගේම භීතිකාවක් තමයි මේක. මේක බොරු මිථ්යා මතයක්.■
-Hisham Hussain-


0 Comments