Subscribe Us

header ads

குவைத் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு இலங்கையர்களுக்கு நடந்தது என்ன?


குவைத் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு இலங்கையர்களை அந்நாட்டுக்கான இலங்கைத் தூதரகம் அந்தத் தண்டனையிலிருந்து மீட்டெடுத்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
வீட்டுப் பணிப்பெண்ணாக குவைத் சென்று, போதைப் பொருள் விற்பனை செய்தார் என குற்றம் சுமத்தி மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நாற்பத்து மூன்று வயதான இலங்கைப் பெண்ணும், சக இலங்கையர் ஒருவரைப் படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவரும் இதில் உள்ளடங்குகின்றனர் என்று அறியமுடிகிறது.
இவர்கள் இருவருக்கும் மரண தண்டனை ரத்தாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் அதேவேளை குவைத் நாட்டுக்கான இலங்கை தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட தூதரக அதிகாரிகளின் முயற்சியினால் இவ்வாறு இரண்டு இலங்கையர்களும் மரண தண்டனையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவருகிறது.

Post a Comment

0 Comments