Subscribe Us

header ads

உஷார் ! ஷார்ஜா சாலைகளில் அதிநவீன ரேடார் கேமிராக்கள் !!



பொதுவாக அமீரகம் முழுவதுமே நவீன ரேடார் கேமிராக்களை நிறுவியுள்ளதுடன் காலத்திற்கு ஏற்றவகையில் மேம்படுத்தப்பட்டு அறிமுகமாகும் நவீன வகை கேமிராக்களை கொண்டும் சாலை கண்காணிப்புக்களை தீவிரப்படுத்துவார்கள். அந்த வகையில் தற்போது ஷார்ஜாவில் புதிய ஸ்மார்ட் ரேடார் கேமிராக்களை பொருத்தியுள்ளனர்.

இந்த ஸ்மார்ட் ரேடார் கேமிராக்கள் முக்கியமாக 3 வகையான போக்குவரத்து விதிமீறல் குற்றங்களை கண்காணிக்கும்.

1. சீட் பெல்ட் அணியாத அனைத்து பயணிகள், டிரைவர் உட்பட.
2. வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளி தராத டிரைவர்கள்.
3. டிரக்குகளுக்கென்று ஒதுக்கப்பட்ட டிராக்கில் செல்லாமல் எல்லை மீறும் டிரக் டிரைவர்.

மேற்காணும் 3 முக்கிய போக்குவரத்துக் குற்றங்களுடன் கூடுதலாக வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துவோர், வாகனம் ஓட்டும் போது சாலையில் கவனமின்றி அலைமோதுவோர், அனுமதிக்கப்பட்ட வேகத்திற்கு மேல் செல்வோர் என கண்காணித்து பிடிப்பதுடன் கூடுதலாக நடைபெறும் போக்குவரத்து விதிமீறல்களை வீடியோ காட்சிகளாக படம்பிடிக்கவும் வல்லவை இந்த ஸ்மார்ட் ரேடார் கேமிராக்கள் என ஷார்ஜா போலீஸ் தெரிவித்துள்ளது.

Source: Msn / Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

Post a Comment

0 Comments