முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மஹிந்த தொடர்பில் தகவல் சேகரிப்பதற்காக பொலிஸாரினால் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குழுவின் மூலம், மஹிந்தவை சந்திக்க வருபவர்கள் தொடர்பில் தகவல் பெற்றுக் கொள்ளப்படுவதாகவும், திடீரென ஆபத்தை ஏற்படுத்தும் செயற்பாடு ஒன்று பொலிஸ் குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ச தனக்கு நெருக்கமானவர்களை சந்திப்பதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் சந்தேகத்திற்குரிய முறையில் செயற்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, மஹிந்தவை கொலை செய்வதற்கான திட்டம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
மஹிந்த ராஜபக்ச தொடர்பில் ஒவ்வொரு வாரமும் அறிக்கை வழங்க வேண்டும் என பொலிஸ் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது.
தான் கடமையே செய்வதாகவும் கூறி குறித்த நபர் கடமைக்கான அடையாள அட்டையையும், தேசிய அடையாள அட்டையும் காட்டியுள்ளார் என குறித்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
0 Comments