கடந்த வாரம் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் எட்டப்பட்டத் தீர்மானத்தின்படி இவ்விரு நாடுகளும் கத்தர் ஏர்வேய்ஸ் விமானங்கள் பறக்கத் தம் வான் பரப்பில் தற்காலிக பாதையினை அனுமதிதுள்ளன.
நவம்பர் மாதம் வரை இந்த அனுமதி செயல்பாட்டில் இருக்கும். அதற்குள் வேறு தீர்வுகள் எட்ட முயற்சி செய்யப்படும். ஆக்ஸ்ட் மாதம் 17 ஆம் தேதியிலிருந்து மற்றொரு பாதையும் திறந்து கொடுக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதே போன்று, சர்வதேச தபால் சேவை அமைப்பிடமும் கத்தர் முறையீடு செய்துள்ளது. பொதுமக்களின் தகவல் தொடர்பைத் தடை செய்துள்ளது சர்வதேச பொது சமூகச் சட்டங்களுக்கு எதிரானது என்ற கத்தரி முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ள சர்வதேச தபால் சேவை அமைப்பு இது தொடர்பாக கத்தரின் தகவல் தொடர்பு துறை அமைச்சருடன் நேற்று கலந்தாலோசனை நடத்தியுள்ளது.
(அப்துர் ரஹ்மான்)
0 Comments