Mohamed Nizous
எயார் டெல் காரனுக்கு
இரண்டாயிரம் பொல்லு
எடிஷலாட் காரனுக்கும்
இயன்றவரை பொல்லு
டெலிகொம்மில் லைன் எடுத்து
முழுக்க பில் ஏற்றி விட்டு
இன்னுமொரு கம்பனியில்
பின்னுகிறார் புது லைனில்
கடனட்டை பாவித்து
கண்ட படி பில் வர
உடனடியாய் அடுத்த பேங்கில்
ஒரு கார்ட் வாங்கி வந்து
இக்கார்ட்டில் காசெடுத்து
அக்கார்ட்டை செட்டில் செய்து
பக்காவாய் பொல்லு வைத்து
பயமின்றித் திரிகின்றார்
வருமானம் போதாவென
வாய் கூசா பொய் கூறி
அரசாங்க உதவித் தொகை
அபகரித்துக் கொள்கின்றார்.
புலமைப் பரீட்சையிலே
புள்ளைங்க பாஸ் செய்தால்
வழமையா பல பேரும்
வருமானம் குறைத்துப் போட்டு
ஹலால் என்று நினைத்து
காசு பணம் பெறுகின்றார்
கல்யாண வீட்டினிலே
கரண்ட் பில்லை தவிர்ப்பதற்கு
செல்கின்ற ரோட் லைன்னில்
மெல்லக் கணக்ட் பண்ணி
உள்ளவரை பாவித்து
சொல்லாமல் கழற்றி விட்டு
பில்லிலே தப்புகிறார்
பித்தலாட்டம் செய்கின்றார்
பக்கத்து WiFiன்
பாஸ் வேர்ட்டை களவெடுத்து
மக்கத்தில் வணங்குவதை
மனங்குளிரப் பார்க்கின்றார்
பக்காவாய் பிளான் பண்ணி
ஹெக் செய்து ஐடி களை
சிக்கலில் போடுகிறார்
செய்வது சரிதானா?
அடுத்தவர் மானத்தை
அக்கு வேறாய் ஆணி வேறாய்
கெடுத்துப் போடுகிறார்
கேடு கெட்ட லைக்ஸ் பெற.
படித்ததை கொப்பி பண்ணி
பந்தாவாய் தன் பெயரில்
கொடுக்கிறார் fb யில்
கொஞ்சமும் நியாயம் இன்றி.
இன்னும் பல இருக்கு
இப்படிப் புதிதாக
பண்ணும் பாவங்களை
பட்டியல் போட்டிடலாம்.
என்ன செய்தாலும்
இறைவன் பார்க்கின்றான்
என்ற நினைவிருந்தால்
இப்படிக் காரியங்கள்
என்றும் நடக்காது
எவருடைய வாழ்வினிலும்....!
0 Comments