அன்பார்ந்த முகநூல் மற்றும் வட்சப் பாவனையாளர்களே! சற்று சிந்திக்க வேண்டாமா!!
இறைவன் நமக்கு 6 அறிவையும் அழகாக படைத்துள்ளான். ஆனால் நாம் அதை பாவிப்பது குறைவு என்பதினை முகநூல் மற்றும் வட்சப் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
ஆம்! சமீப காலமாக வட்சப்பில் ஒரு செய்தி பரவலாக வலம் வந்து கொண்டு இருக்கின்றது.
" சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் " வழங்கும் 10GB 3G DATA மற்றும் Rs.1000 Talktime 🏆 பெறும் வாய்ப்பு
ரஜினிகாந்த்ன் கபாலி படத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு மாஸான வரவேற்பு கிடைத்தது. இதனால் படக்குழுவினர்.
இந்த சந்தோஷ தருணத்தைக் கொண்டாடவும் .சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தவும் " ரஜினிகாந்த் மக்கள் இயக்க செயலாளர் டேனியல் உதவியுடன் வாட்ஸ் அப் மூலம் வழங்குகிறார்.
இந்த செய்தியை உடனே 5 குழுவிற்கு ஷேர் செய்து 10 GB 3G டேட்டா மற்றும் ₹1000 டாக்டைம் பெற்று மகிழுங்கள்.
இது முற்றிலும் உண்மை.
share And check your balance after 5 minutes.
(Check balance)
Vodefone-*111*6*2#,
Airtel-*121*2#,
Mobital-*123*10#,
Hutch-*165*6*1#.....
Etisalat-*111*1*1#
Dialog-#678#
I am also shocked. But It's true.
Try this Now.
ஆம் இதை செயார் செய்தால் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எமது DATA வை சீரழித்து நாம் 5 வட்சப் குழுமங்களுக்கு அனுப்பி மீழ் வந்து எமது BALANCE யை செக் செய்தால் 100 MB யாக இருந்த DATA 50 MB யாக இருக்குமே தவிர 10 GB யாக இருக்காது பிறகு என்ன ஏமாற்றம் தான். இதை அவர்கள் செயார் செய்ய முன் சற்று யோசிக்க வேண்டும் கோடிக்கணக்கில் செலவழித்து படம் எடுத்து மீண்டும் ஏன் இவர்கள் எமக்கு RECHARGE பன்ன போகிறார்கள் என்று.
அதுமட்டுமா ஒரு நோயினால் பாதிக்கப்பட்ட குழுந்தையின் போட்டோக்களை GOOGLE மூலமாக DOWNLOAD செய்து அதை வடசப்பில் பதிவு செய்து அதன் கீழாக குரல் வடிவில் பதிவு செய்கிரார்கள் இதை நீங்கள் மற்ற குழுமங்களுக்கு செயார் செய்வதால் வட்சப் நிறுவனம் இக்குழந்தைக்கு 1 ரூபாய் வழங்குகிறது என்று. ஆனால் உண்மையான கதை அது அல்ல நீங்கள் செயார் செய்யும் ஒவ்வொரு பதிவுக்கும் உங்களிடமிருந்துதான் 1 ரூபாய் பறிக்கப்படுகின்றது என்று. அதுமட்டுமில்லாமல் கடந்த சில தினங்களுக்கு வடசப் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது நீங்கள் அனுப்பும் குரல்வடிவங்களையோ,புகைப்படங்களையோ வட்சப் நிறுவனம் கூட பார்க்க முடியாத அளவில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பிறகு என்னவென்று இக்குழந்தையின் அல்லது முட்டாள் தனமான பதிவுகளை வட்சப் பார்க்க போகின்றது.
அது போன்றுதான் முகநூலில் ஒரு போட்டோவை போட்டு அதில் எழுதிவிடுவார்கள் இப்படத்திற்கு LIKE செய்து JUMP என்று COMMENT செய்து விட்டு செயார் செய்யுங்கள் கீழே படத்தில் காட்டிய சிறுவன் கடலில் பாய்வான் என்று அத்துடன் எமது போராளிகள் அதை செய்து பார்த்து ஏமாந்து விடுவார்கள் சிந்திக்க வேண்டாமா ஒரு படத்திற்கு உயிர் குடுக்க வேண்டும் என்றால் எம்மை படைத்தை இறைவனை தவிர வேறு எவராலும் முடியாது என்று. ஆகவே தயவு செய்து இது போன்ற விடயங்களில் இருந்து தவிர்நது கொள்ளுங்கள் இன்று முதல். நீங்கள் நிறுத்தும் பட்சத்தில் இவர்களும் இது போன்ற பதிவுகளை இடுவதை தவிர்த்து கொள்ளுவார்கள்.
இவர்கள் எம்மை முட்டால்கள் ஆக்கி வைத்துள்ளார்கள் என்பதுதான் உண்மை இவைகளை நம்பி உங்களை நீங்களே முட்டால் ஆக்கி கொள்ளாதீர்கள்.
அச்சமயத்தில் நம்மில் ஏதோ ஒரு வகையில் ஒரு திறமை ஒழிந்து கொண்டுதான் இருக்கிறது அத்திறமைகளை இம்முகநூல் மற்றும் வடசப் வாயிலூடாக பகிர்ந்து உங்களுக்கு தேவையான LIKE AND SHARE களை பெற்றுக்கொள்ளலாமே.
தொகுப்பு : MHD.JEEZAN & MNM.FARHAN
0 Comments