புத்தளம் YMMA கிளை ஏற்பாடு செய்த 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி இலவச கருத்தரங்கு நேற்று (2017-07-16) ILHAM Marikkar Foundation னின் பணிப்பாளர் இல்ஹாம் மரைக்காரின் அனுசரணையுடன் ஸைனப் ஆரம்ப கல்லூரியில் மற்றும் சாஹிரா ஆரம்ப கல்லூரியில் இடம் பெற்றது.
புத்தளம் YMMA மாவட்ட பணிப்பாளர்.எம்.டீ.எம். நபீல் தலைமையில் செயலாளர் முஜாஹித் நிசார் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் புத்தளம் வை.எம்.எம்.ஏ தலைவர் அல்ஹாஜ் S.R.M.M. முஹ்ஸி மற்றும் பிரதான வளவாளர் M.K.M.நஜீபுல்லாஹ். அறிவுச் சுடர் கல்வி மேம்பாட்டு அமைப்பின் பணிப்பாளர் சுரேஸ், ஆசிரியர் மில்ஹான் ஆகியோர் கலந்து கொண்டனர் .
0 Comments