Subscribe Us

header ads

#Burger-eating contest #பர்கர் சாப்பிடும் போட்டி: #வயிறு கிழிந்து அவதிப்பட்ட மாணவன்



அதிக எண்ணிக்கையிலான சில்லி பர்கர் சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப்பெற்ற டெல்லி பல்கலைக்கழக மாணவன்,  வயிற்றின் உட்சுவர் கிழிந்து கடும் அவதிக்குள்ளானார். மேற்கு டெல்லியில் உள்ள ஒரு ரெஸ்ட்டாரண்ட் சார்பில் ‘சில்லி பர்கர்’ சாப்பிடும் போட்டி  நடந்தது. இதில் நாளொன்றுக்கு அதிக அளவிலான பர்கரை சாப்பிட்டு வெற்றிப் பெருவோருக்கு அந்த மாதம் முழுவதுக்குமான உணவு இலவசமாக  வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த விபரீத போட்டியினால் பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் என தெரிந்தும், பலர் இதில் போட்டி  போட்டு பங்கேற்றனர். டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து வரும் கர்வ் குப்தா என்ற மாணவரும், தனது நண்பர்களுடன் போட்டியில் கலந்து  கொண்டார்.

இதில் அதிக எண்ணிக்கையிலான சில்லி பர்கரை சாப்பிட்ட கர்வ் குப்தா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அதன்பின் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய  அவர், கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோதுதான் விபரீதத்தை உணர்ந்தார். அவரது வயிற்றின்  உள்புறத்தில் தசை கிழிந்துள்ளது. தற்போது வயிற்றின் கிழிந்த பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அப்புறப்படுத்த வேண்டும் என மருத்துவர்கள்  அறிவுறுத்தியுள்ளனர். விளையாட்டு வினையானது அம்மாணவரின் வாழ்க்கையில் நிஜமாகியுள்ளது.

இது குறித்து டெல்லி பல்கலை.யில் இரண்டாம் ஆண்டு படிக்கும் கர்வ் குப்தா கூறுகையில், ‘நான் பர்கர் சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்டு  அதிக அளவிலான பர்கர் சாப்பிட்டேன். மறுநாள் தான் அதன் விபரீதம் தெரிந்தது. நான் வாந்தி எடுத்தபோது, அதில் ரத்தம் வந்தது. இதையடுத்து நான்  பிஎல்கே கபூர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டலுக்கு சென்றேன். அங்கு எனக்கு எண்டோஸ்கோபி பரிசோதனை மேற்கொண்டபோது, எனது வயிற்றின்  உட்சுவர் கிழிந்து இருந்தது. சில்லி பர்கர் அதிக அளவில் சாப்பிட்டதன் விளைவு தான் இதற்கு காரணம் என மருத்துவர் தெரிவித்துள்ளார்’ என்றார். மருத்துவர் தீப் கோயல் கூறுகையில், ‘காரத்தன்மை கொண்ட மிளகாய், அமிலத்தை சுரக்க செய்ய கூடியது. அதிகளவில் இதனை உட்கொள்ளும்போது,  வயிற்றின் உட்சுவரில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அல்சர் மற்றும் அதிக அளவில் மதுபானம் அருந்துவோருக்கு இந்த பிரச்னை இருக்கும். சில்லி  பர்கர் சாப்பிட்டதன் விளைவாக வயிற்றின் உட்சுவர் கிழிந்தது இதுவே முதல் முறை’ என அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்தார். 

Post a Comment

0 Comments