குவைத்தை சேர்ந்த தம்பதிக்கு கடந்த ஜூலை 1 ஆம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை அத்தம்பதிக்கு 2 வது குழந்தையாகும்.
குழந்தையின் பெற்றோர் இதுவரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விஜயம் செய்ததில்லை என்றாலும் அமீரகத்தை நேசிக்கக்கூடியவர்களாக இருந்துள்ளனர். இந்த நேசத்தின் விளைவாக தங்களுக்கு பிறந்த 2 வது குழந்தைக்கு 'இமராத்' எனப் பெயரிட்டனர்.
இந்த செய்தியை அறிந்த அமீரகத்தை சேர்ந்த தண்ணீர் விற்பனை செய்யும் நிறுவனமான வைவேரா (WAIWERA) 'இமராத்' என குவைத் குழந்தைக்கு பெயரிட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 'இமராத்' எனும் அக்குழந்தையின் வாழ்நாள் முழுவதும் தண்ணீரை அன்பளிப்பாக அதுவும் குவைத்திலேயே வழங்க முன்வந்துள்ளது.
இன்றைய உலகில் தண்ணீரை அன்பளிப்பாக பெற்றுக் கொள்வதும், அதை மனமுவந்து தருவதும் விலைமதிக்க முடியாத செயல் தான் என்றால் அது மிகையில்லை.
Kuwait Tamil Pasanga
0 Comments