சின்ன சின்ன தம்பிமாருடைய கைகளில் எல்லாம் இப்ப மோட்டார் சைக்கிள்தான் ஒரு பைக்கில் 3 பேர், 4பேர் என்றெல்லாம் ஏறிச் சென்று குதுாகலிக்கின்றார்கள், துள்ளிக் குதிக்கின்றார்கள்.
பெருநாள் காலங்களில்தான் அதிக விபத்துக்கள் சம்பவிக்கின்றன அந்த விபத்துக்களில் குறைந்தது ஒரு உயிராவது போய்க் கொண்டுதான் இருக்கின்றது.
இளைஞர்களின் கைகளில் மோட்டார் சைக்கிள் கிடைத்து விட்டால் போதும் தரையில் ஓட்ட வேண்டிய பைக்கை வானத்தில் ஓட்டுகிறார்கள், கண் முன் தெரியாமல் வேகமாக ஓட்டுகின்றார்கள்.
இளைஞர்களே..!!! மோட்டார் சைக்கிள் 4 டயர்களைக் கொண்ட ஒரு வாகணம் அல்ல வெறும் 2 டயர்கள்தான் பாத்து அவதானமாக ஓட்டிச் செல்லுங்கள்.
உயிர் என்பது மயிர் போன்று போனால் வளரக் கூடியது அல்ல போனால் போனதுதான்.
பாரிய, கொடூர விபத்துக்களில் இருந்து எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.
ஆமீன்..ஆமீன்.
மக்கள் நண்பன்.
சம்மாந்துறை அன்சார்.
0 Comments