Subscribe Us

header ads

இவ்வுலகில் யார் அழகி? அசரவைக்கும் பதிலை அளித்த முன்னால் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம்...!


முன்னால் ஜனாதிபதியான டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் ஒரு முறை பெண்கள் பள்ளி விழா ஒன்றிற்கு வருகை புரிந்துள்ளார்.
விழா முடிந்தவுடன் வழக்கம் போல மாணவிகளுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, கலாம் அவர்கள் மாணவிகளிடம் ஒரு கேள்வியை முன் வைத்தார். தற்போது உலக அழகியாக நம் நாட்டைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அல்லவா? அவர் ஏண் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என கேட்டுள்ளார்.
ஒரு மாணவி "அங்கு வந்திருந்தவர்களில் அவர்தான் அழகாக இருந்தார்" என்கிறாள்..
அவருக்கு பதிலில் திருப்தி இல்லை..
அடுத்த மாணவி "அங்கே கேட்கப்பட்ட கேள்விக்கு அறிவுப் பூர்வமாக சிறப்பான ஒரு பதிலை சொன்னார்"..
அதிலும் அவருக்கு சம்மதமில்லை..
இப்படியே போய்க் கொண்டு இருக்க, அரங்கமே புரிபடாத ஒரு அமைதியில் இருக்கிறது..
ஆசிரியர் உட்பட அத்தனை பேருக்கும் குழப்பமான குழப்பம்..
அப்போது, ஒரு சிறுமி எழுந்து ஐயா நான் கூறலாமா? எனக் கேட்க, கலாம் அவர்களும் தாராளமாக கூறலாம் என பதிலளித்தார்.
அந்த பெண் கூறிய பதில் அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது. ஆனால் கலாம் அவர்கள் மட்டும் கைதட்டல் கொடுத்துப் பாராட்டினார்.
அப்படி என்ன பதில் அந்த பெண் கூறினார் எனக் கேட்கிறீர்களா?
அந்த சிறுமி கூறியதாவது, ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்ப்பட்டதற்கான காரணம் நான் அந்த போட்டியில் கலந்துகொள்ளவில்லை அதனால் தான் எனக் கூறியுள்ளார்.
அந்த சிறுமி கூறியதற்கு கலாம் அவர்கள் என்ன கூறினார் தெரியுமா?
very good, இது தான் சரியான பதில். நம் அழகினை நிர்ணயம் செய்வதற்கு அடுத்தவர்கள் யார்? அதற்கு முன் நம்மை நாமே அழகு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டுமல்லவா.?
கனிவான அன்பும்
தளராத நம்பிக்கையும்
உயர்வான எண்ணமும் கொண்ட
நாம் எல்லாருமே அழகுதானே?
அந்த நம்பிக்கை தானே அழகு!
என்று கூற அரங்கமே கரவொலியில் அதிரத் தொடங்கியது.

Post a Comment

0 Comments