Subscribe Us

header ads

மொஹமட் நிஷோஸின் (பட்டபின் வரும் ஞானம்) கவிதை தொகுப்பு.



நோனாமார் தாக்குதலில்
நானா மார் படும்போது
வீணாக மாட்டியதாய்
விளக்கம் பெறும் ஞானம்

பைலா ஆடித் திரிந்து விட்டு
படிக்காமல் பேப்பர் எழுதி
பெய்லான பின்னாலே
பிறக்கின்ற படிப்பு ஞானம்

வட்டிக்கு எடுக்காதேன்னு
வாய் கிழியக் கத்தினாலும்
பட்டு மாய்ந்த பின்னே
பலருக்கும் வரும் ஞானம்

இன்பொக்ஸில் இப்லீசாகி
போஸ்ட் போட அவுலியாவாகி
ஸ்க்றீன் சொட் வந்த பின்னால்
ஏடாகூடமாய் வரும் ஞானம்

சூப்புக் கடை கிழங்குக் கடை
சூப்பராக இறுக்கி விட்டு
ஆப்பாக கொலஸ்ட்ரோல் வர
அப்போது வரும் ஞானம்

வார்ட்டில் படுத்தபடி
வானத்தைப் பார்க்கும் போது
ஓட்டுகிற பைக் பற்றி
உதிக்கின்ற ஸ்பீட் ஞானம்

போன ஆட்சி விரட்டி விட்டு
புது ஆட்சி கொண்டு வர
ஞான ஆட்டம் அதிகரிக்க
'ஞானம்' வெறுத்து வரும் ஞானம்

ஆடுற ஆட்டமெல்லாம்
ஆடு ஆடு என ஆடிவிட்டு
ஆடு போல சாந்தமாக
அறுபதின் பின் வரும் ஞானம்

பட்டபின் வரும் ஞானம்
யாருக்கும் உதவாது
வருமுன் பெறும் ஞானம்
வாழ்க்கையை உயர்த்த உதவும்.

Post a Comment

0 Comments