இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அடைந்த படுதோல்விக்கான காரணத்தை இலங்கை அணித்தலைவர் ரங்கன ஹேரத் வெளியிட்டுள்ளார்.
காலே மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 304 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றிப்பெற்றது.
முதல் டெஸ்ட் போட்டியில் தனது அணியினர் அனைத்து துறையிலும் மிக மோசமாக விளையாடியதாக ஒப்புக்கொண்ட இலங்கை அணித்தலைவர் ஹேரத், தவான் விக்கெட்டை தவறவிட்டதே இலங்கை அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
இதுவே போட்டி இலங்கையிடம் இருந்து நழுவ முக்கிய காரணம். மேலும், இலங்கை நட்சத்திர வீரர் குணரத்ன இல்லாதது அணிக்கு பெரும் இழப்பாக அமைந்தது.
எஞ்சிய இரண்டு போட்டிகளில் வெல்ல வேண்டுமெனில், எப்படியாவது முன்னேற புதிய வழிகளை கண்டுபிடித்து சிறப்பாக செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.
0 Comments