ஊழியர்களின் தேவையை நிறைவேற்றிகொள்ளவே இந்த மைக்ரோசிப்களை உடலில் பதியப்படுகிறது. இந்த மைக்ரோசிப் மூலம் ஊழியர்கள் அலுவலகத்திற்குள் நுழைய தங்கள் கைகைகளை ஸ்வைப் செய்தாலே போதுமானது. மேலும் கம்யூட்டரை லாகின் செய்யவும், கதவுகளை திறக்கவும், அலுவலகம் சார்ந்த பணிகளுக்கு பணம் செலுத்தவும் இது பயன்படும். இந்த நிறுவனத்தில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள் இந்த மைக்ரோசிப்களை உடலில் செலுத்துவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் செயல்படுத்தபட உள்ளது.
இது குறித்து இந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
மைக்ரோசிப்களை ஊழியர்களின் உடலில் செலுத்தப்படும் போது ஒரு ஊசி போல உணர்வினை மட்டுமே வெளிப்படுத்தும். ஊழியர்களைக் கண்காணிப்பதற்காக மட்டும் இது பயன்படுத்தபடமாட்டாது என அவர் கூறினார்.
உலகிலேயே முதன் முறையாக 2017, ஏப்ரல் 3-ம் தேதி ஸ்வீடன் நிறுவன ஒன்று தனது ஊழியர்களின் உடலில் மைக்ரோசிப்களை உட்பொதித்தது குறிப்பிடத்தக்கது.


0 Comments